கோத்தகிரி அருகே 5 டன் கலப்படதேயிலை பறிமுதல் செய்த தேயிலை வாரிய அதிகாரிகள்

நீலகிரி : கோத்தகிரி அருகே தேயிலையில் கலப்படம் செய்வதற்காக எடுத்து வரப்பட்ட 5 டன் கலப்பட தேயிலையை தேயிலை வாரிய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நீலகிரி : கோத்தகிரி அருகே தேயிலையில் கலப்படம் செய்வதற்காக எடுத்து வரப்பட்ட 5 டன் கலப்பட தேயிலையை தேயிலை வாரிய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 



நீலகிரி மாவட்டத்தின் பிரதான தொழிலாக உள்ளது தேயிலைத் தொழில். இந்த தொழிலை நம்பி ஏராளமான விவசாய குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்திற்கு கடந்த சில நாட்களாக கலப்பட தேயிலை சமவெளிப் பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படுவதாக தேயிலை வாரியத்திற்கு தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து ,கோத்தகிரி அருகே குஞ்சப்பனை பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் வந்து கொண்டிருந்த லாரியை பிடித்து தேயிலை வாரிய அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, லாரியில் தேயிலையில் கலப்பதற்காக 5 டன் கலப்பட தேயிலை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.



இதனையடுத்து, லாரியை தேயிலை வாரிய அதிகாரிகள் குன்னூரில் உள்ள தேயிலை வாரிய அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். விசாரணைக்கு பின் இந்த கலப்பட தேயிலை எங்கிருந்து கொண்டு வரப்பட்டது, எந்த ஆலையில் கலப்படம் செய்ய திட்டமிடப்பட்டது போன்ற விவரங்கள் தெரியவரும்.

Newsletter

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...

கோவை சீத்தாலட்சுமி நகர்புற சுகாதார நிலையத்தில் இலவச டயாலிசிஸ் மையம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவ...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...