பொள்ளாச்சி மக்களவை தேர்தலில் தி.மு.க.வுக்கு வெற்றி முகம் : 39 ஆண்டுகளுக்குப் பிறகு பொள்ளாச்சியில் மீண்டும் கால் பதிக்கிறது

பொள்ளாச்சி : தமிழகத்தில் மக்களவை தேர்தல் கடந்த மாதம் 18-ம் தேதி நடைபெற்றது. இதில், பொள்ளாச்சி தொகுதியில், அ.தி.மு.க., தி.மு.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் உள்பட சுயேட்சைகளும் போட்டியிட்டுள்ளனர். இந்த நிலையில், நாடு முழுவதும் வாக்கு எண்ணும் பணி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பொள்ளாச்சி மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மையமான பொள்ளாச்சி மகாலிங்கம் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை பல்வேறு சுற்றுகளாக நடந்து வருகிறது.


பொள்ளாச்சி : தமிழகத்தில் மக்களவை தேர்தல் கடந்த மாதம் 18-ம் தேதி நடைபெற்றது. இதில், பொள்ளாச்சி தொகுதியில், அ.தி.மு.க., தி.மு.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் உள்பட சுயேட்சைகளும் போட்டியிட்டுள்ளனர். இந்த நிலையில், நாடு முழுவதும் வாக்கு எண்ணும் பணி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பொள்ளாச்சி மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மையமான பொள்ளாச்சி மகாலிங்கம் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை பல்வேறு சுற்றுகளாக நடந்து வருகிறது. 

18-வது சுற்று நிலவரப்படி, தி.மு.க. வேட்பாளர் சண்முகசுந்தரம், அ.தி.மு.க. வேட்பாளர் மகேந்திரனை விட :1,48,967 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். அதாவது, தி.மு.க.வின் சண்முகநாதன் 4,82,255 வாக்குகளும், அ.தி.மு.க.வின் மகேந்திரன் 3,33,288 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மூகாம்பிகை 51,752 வாக்குகளும், அ.ம.மு.க.வின் முத்துக்குமார் 8,457

வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சனுஜா 27,376 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதன்மூலம், தி.மு.க. வேட்பாளர் சண்முகசுந்தரத்தின் வெற்றி உறுதியாகியுள்ளது. ஏற்கனவே, 1967, 1971 மற்றும் 1980 ஆகிய ஆண்டு தேர்தல்களில் தி.மு.க. பொள்ளாச்சியில் வென்றுள்ளது. 

இதனால், பொள்ளாச்சி தொகுதியில் 4-வது வெற்றியைப் பெறுகிறது. தி.மு.க. கூட்டணியில் 1996-ல் த.மா.கா.வும், 1999 மற்றும் 2004 ம.தி.மு.க.வும் வெற்றி பெற்றுள்ளது. 

சண்முகசுந்தரம் வெற்றி பெறுவதன் மூலம் 39 ஆண்டுகளுக்குப் பிறகு பொள்ளாச்சி தொகுதியில் தி.மு.க. வெற்றி பெறுகிறது. கடந்த 1980-ம் ஆண்டு தி.மு.க. வேட்பாளர் சி.டி.தண்டபாணி வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...