கமலுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது கோவை மாநகர ஆணையரிடம் புகார்

கோவை : மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் கொடுத்ததாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.


கோவை : மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் கொடுத்ததாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் சுதந்திரம் பெற்ற இந்தியாவின் முதல் இந்து தீவிரவாதி கோட்சே என அரவக்குறிச்சி சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சரத்தின் போது பேசியிருந்தார். அதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தது. இதனையடுத்து, தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கடந்த 13-ஆம் தேதி ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தேர்தலின் போது மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனின் நாக்கை அறுப்பேன் என கூறியிருந்தார். அதேபோல, மக்கள் அனைவரும் அவருடைய நாக்கை அறுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இதனையடுத்து, கரூரில் பரப்புரையின் போது கமல்ஹாசன் மீது முட்டை மற்றும் கல்வீச்சு சம்பவம் நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில், கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் கொடுத்ததாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.



மேலும், இந்த சம்பவம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளதாகவும், அதிகாரத்தில் இருக்கும் அமைச்சரே பொறுப்பற்ற முறையில், அரசியல் சாசனத்திற்கு எதிராக மற்ற கட்சியின் தலைவர் மீது தாக்குதல் நடத்துவேன் எனக் கூறுவது ஜனநாயகத்திற்கு எதிரானது எனக் குறிப்பிட்டுள்ளனர். ஆகவே, கோவை மாநகர காவல் ஆணையர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என மக்கள் நீதி மய்யத்தினர் புகாரில் தெரிவித்துள்ளனர்.

Newsletter

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...