பொள்ளாச்சி வாக்கு எண்ணும் மையத்தில் 22 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை

இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணும் பணி தொடங்குகிறது. பொள்ளாச்சி மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை 22 சுற்றுகளாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, அனைத்து கட்சி அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் வாக்கு எண்ணும் மையத்தில் குவிந்து வருகின்றனர்.


கோவை: பொள்ளாச்சி மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை 22 சுற்றுகளாக நடைபெறுகிறது.

தமிழகத்தில் கடந்த மாதம் 18-ம் தேதி ஒரேகட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. இதில், பொள்ளாச்சி தொகுதியில் அ.தி.மு.க., தி.மு.க., மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 14 பேர் போட்டியிட்டனர். அன்றைய தினம் மாலை 6 மணி வரை நடந்த வாக்குப்பதிவில், 70.78 சதவீதம் வாக்குகள் பதிவாகின. மொத்தமுள்ள 15 இலட்சத்து 20 ஆயிரத்து 276 வாக்காளர்களில், 10 இலட்சத்து 76 ஆயிரத்து 55 பேர் வாக்களித்தனர். பின்னர், வாக்குப்பதிவு இயந்திரங்கள், பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மையமான மகாலிங்கம் தொழில்நுட்ப கல்லூரியில் சீல் வைக்கப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. வாக்கு எண்ணும் மையத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணும் பணி தொடங்குகிறது. பொள்ளாச்சி மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை 22 சுற்றுகளாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, அனைத்து கட்சி அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் வாக்கு எண்ணும் மையத்தில் குவிந்து வருகின்றனர்.

Newsletter

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...

கோவை சீத்தாலட்சுமி நகர்புற சுகாதார நிலையத்தில் இலவச டயாலிசிஸ் மையம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவ...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...