நீலகிரி மலை ரயிலில் சுற்றுலாப் பயணிகளுடன் பயணம் செய்து மகிழ்ந்த ஆளுநர்

நீலகிரி : குன்னூர் அருகே வெலிங்டன் ரயில் நிலையத்தில் இருந்து உதகை வரை சுற்றுலா பயணிகளுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மலை ரயிலில் பயணம் செய்தார்.


நீலகிரி : குன்னூர் அருகே வெலிங்டன் ரயில் நிலையத்தில் இருந்து உதகை வரை சுற்றுலா பயணிகளுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மலை ரயிலில் பயணம் செய்தார்.



நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெற்ற 123-வது மலர்கண்காட்சி தொடக்க விழாவிற்கு வந்திருந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், உதகையில் ஆளுநர் மாளிகையில் கும்பத்துடன் தங்கி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பின்னர், தமிழக மலை ரயிலில் குடும்பத்தினருடன் பயணம் செய்ய முடிவு செய்தார். இதற்கு மாவட்ட நிர்வாகம் குன்னூரில் இருந்து சுற்றுலாப் பயணிகளுடன் உதகைக்கு பிற்பகல் செல்லும் மலை ரயிலில், அவர் குடும்பத்துடன் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டது. குன்னூர் அருகேயுள்ள ரயில் நிலையத்தில் எஸ்.பி. சண்முகப்பிரியா தலைமையில் அதிகளவில் போலீசார் ரயில் நிலையம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 



ஆளுநர் வெலிங்டன் ரயில் நிலையத்திற்கு வந்ததும் ஆளுநருக்கு மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா ஆகியோர் வெலிங்டன் ரயில் நிலையத்தில் வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து, ஆளுநர் தன் குடும்பத்தாருடன் வெலிங்டன் ரயில் நிலையத்தில் குன்னூரில் இருந்து உதகைக்கு சுற்றுலாப் பயணிகளுடன் வந்த மலை ரயிலில் சுற்றுலாப் பயணிகளுடன் பயணம் மேற்கொண்டார்.

Newsletter

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...