கோவை : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளி திருநாவுக்கரசு வீட்டில் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள், தற்போது மற்றொரு குற்றவாளியான சபரி ராஜன் வீட்டில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளி திருநாவுக்கரசு வீட்டில் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள், தற்போது மற்றொரு குற்றவாளியான சபரி ராஜன் வீட்டில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பு விசாரணையிலிருந்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. பின்னர், சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையில் இருந்து சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த விசாரணையில் சி.பி.ஐ. போலீசார் பொறுப்பேற்றதிலிருந்து பொள்ளாச்சி பகுதி காவல்நிலையத்திற்கு கூட தகவல் தெரியாதபடி மறைமுகமாக விசாரணைகளை மேற்கொண்டனர்.
மேலும், கடந்த 14-ம் தேதி சின்னப்பம்பாளையத்தில் உள்ள திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் ஆய்வு நடத்திய சி.பி.ஐ. அதிகாரிகள், இன்று சபரிராஜன் வீட்டில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பு விசாரணையிலிருந்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. பின்னர், சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையில் இருந்து சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த விசாரணையில் சி.பி.ஐ. போலீசார் பொறுப்பேற்றதிலிருந்து பொள்ளாச்சி பகுதி காவல்நிலையத்திற்கு கூட தகவல் தெரியாதபடி மறைமுகமாக விசாரணைகளை மேற்கொண்டனர்.
மேலும், கடந்த 14-ம் தேதி சின்னப்பம்பாளையத்தில் உள்ள திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் ஆய்வு நடத்திய சி.பி.ஐ. அதிகாரிகள், இன்று சபரிராஜன் வீட்டில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.