கோவை : சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், 3 மணி நிலவரப்படி 58.16 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
கோவை : சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், 3 மணி நிலவரப்படி 58.16 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
காலியாக உள்ள சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக 324 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் குடிநீர் வசதி, மின்வசதி, சாய்தள வசதி என அனைத்து வசதிகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது. மொத்தம் 2,95,158 வாக்காளர்கள் வாக்களித்து தங்களது தொகுதி எம்.எல்.ஏ.வை தேர்வு செய்ய உள்ளனர். இந்த நிலையில், 3 மணி நிலவரப்படி 58.16 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. 88,693 ஆண் வாக்காளர்களும், 82,986 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 1,71,681 வாக்குகள் பதிவாகின.
கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தெர்தலில் 75 சதவீத வாக்குகள் பதிவாகின. அதில், 47.38 சதவீத வாக்குகள் பெற்று மறைந்த அ.தி.மு.க., எம்.எல்.ஏ. கனகராஜ் வெற்றி பெற்றார்.