கோவை : மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறாவளிக்காற்றினால் சேதமடைந்த வாழைக்கு உற்பத்தியில் பாதி தொகையாவது இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி வரும் ஜூன் 5-ம் தேதி பேரணி நடத்தப்போவதாக தமிழக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.
கோவை : மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறாவளிக்காற்றினால் சேதமடைந்த வாழைக்கு உற்பத்தியில் பாதி தொகையாவது இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி வரும் ஜூன் 5-ம் தேதி பேரணி நடத்தப்போவதாக தமிழக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பிரதான விவசாயமாக வாழை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. நேந்திரன்,ரோபஸ்டா, கதிலிம், சாம்பல் வாழை என பலவிதமான வாழைகள் உற்பத்தி செய்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், அண்டை மாநிலத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன் மேட்டுப்பாளையம், அன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் பலத்த சூறாவளிக்காற்று வீசியதன் காரணமாக சிறுமுகை, பகத்தூர், சம்பரவள்ளி உள்ளிட்ட புற நகர் பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து நாசமானது. இதனால், ஏக்கருக்கு பல லட்சம் செலவு செய்து வாழை சாகுபடி செய்த விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்த நிலையில், சேதமடைந்த வாழைகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து, மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில், சேதமடைந்த பகுதிகளை ஆய்வு செய்த வருவாய்த்துறையினர் மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் வாழைக்கு ஜந்து ரூபாய் என்ற கணக்கில் நஷ்டஈடு வழங்க அறிக்கை சமர்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு தமிழக விவசாயிகள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மேட்டுப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் வேணுகோபால் பேசியதாவது :- ஒரு வாழையை உற்பத்தி செய்ய நடவு பணியில் இருந்து 250 ரூபாய் வரை செலவு செய்வதாகும். ஆனால், தற்போது அதிகாரிகள் கொடுத்துள்ள நஷ்ட ஈடு அறிக்கையின்படி, 5 ரூபாய் என்பது முறிந்து விழுந்துள்ள மரங்களை அப்புறபடுத்த கூட முடியாது. மேலும், 4 வாழைக்கு 5 ரூபாய் என்பது விவசாயிகளை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது. ஆண்டுதோறும் இது போன்ற இயற்கை சீற்றங்கள் மற்றும் வனவிலங்குகள் தொல்லை காரணமாக, வாழை விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே, வாழை விவசாயிகளுக்கு உற்பத்தியில் பாதி தொகையாவது, அதாவது 250 ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜூன் 5 ஆம் தேதி கோவையில் பேரணி நடத்தப்படும், என அவர் தெரிவித்தார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பிரதான விவசாயமாக வாழை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. நேந்திரன்,ரோபஸ்டா, கதிலிம், சாம்பல் வாழை என பலவிதமான வாழைகள் உற்பத்தி செய்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், அண்டை மாநிலத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன் மேட்டுப்பாளையம், அன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் பலத்த சூறாவளிக்காற்று வீசியதன் காரணமாக சிறுமுகை, பகத்தூர், சம்பரவள்ளி உள்ளிட்ட புற நகர் பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து நாசமானது. இதனால், ஏக்கருக்கு பல லட்சம் செலவு செய்து வாழை சாகுபடி செய்த விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்த நிலையில், சேதமடைந்த வாழைகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து, மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில், சேதமடைந்த பகுதிகளை ஆய்வு செய்த வருவாய்த்துறையினர் மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் வாழைக்கு ஜந்து ரூபாய் என்ற கணக்கில் நஷ்டஈடு வழங்க அறிக்கை சமர்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு தமிழக விவசாயிகள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மேட்டுப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் வேணுகோபால் பேசியதாவது :- ஒரு வாழையை உற்பத்தி செய்ய நடவு பணியில் இருந்து 250 ரூபாய் வரை செலவு செய்வதாகும். ஆனால், தற்போது அதிகாரிகள் கொடுத்துள்ள நஷ்ட ஈடு அறிக்கையின்படி, 5 ரூபாய் என்பது முறிந்து விழுந்துள்ள மரங்களை அப்புறபடுத்த கூட முடியாது. மேலும், 4 வாழைக்கு 5 ரூபாய் என்பது விவசாயிகளை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது. ஆண்டுதோறும் இது போன்ற இயற்கை சீற்றங்கள் மற்றும் வனவிலங்குகள் தொல்லை காரணமாக, வாழை விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே, வாழை விவசாயிகளுக்கு உற்பத்தியில் பாதி தொகையாவது, அதாவது 250 ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜூன் 5 ஆம் தேதி கோவையில் பேரணி நடத்தப்படும், என அவர் தெரிவித்தார்.