கோவையில் பட்டப்பகலில் இளைஞர்களை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்ற வழக்கு : குற்றவாளிகள் 4 பேருக்கு 29-ம் தேதி வரை நீதிமன்ற காவல்

கோவை : கோவை - அவினாசி சாலை அருகே பட்டப்பகலில் இரண்டு இளைஞர்களை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட 4 குற்றவாளிகளுக்கு 29-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளத்கு.


கோவை : கோவை - அவினாசி சாலை அருகே பட்டப்பகலில் இரண்டு இளைஞர்களை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட 4 குற்றவாளிகளுக்கு 29-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளத்கு.

கோவை கணபதி பழைய சக்தி சாலை காமராஜர் நகரைச் சேர்ந்தவர்கள் பிரதீப் மற்றும் தமிழ்வாணன். இவர்கள் அடிதடி வழக்கில் கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் இரண்டில் கையெழுத்திட்டு வந்தனர். இந்த நிலையில், நேற்று இருவரும் வழக்கம்போல கையெழுத்திட்டு விட்டு, அவினாசி சாலையில் உள்ள சிஎஸ்ஐ சர்ச் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது, திடீரென அவர்களை வழிமறித்த 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளைக் கொண்டு சரமாரியாக தாக்கியது. பின்னர், பொதுமக்களின் நடமாட்டம் அதிகரித்ததையடுத்து கும்பல் தப்பி ஓடியது. இதையடுத்து, அங்கிருந்தவர்கள் இரண்டு இளைஞரையும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.



இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் மற்றும் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில், உதவி ஆணையாளர் எழிலரசு மேற்பார்வையில் ஆய்வாளர் தெய்வசிகாமணி தலைமையிலான உதவி ஆய்வாளர் ரஜினிகாந்த் உள்ளிட்ட 7 பேர் கொண்ட போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும், சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களையும் ஆய்வு செய்தனர். இதில், சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது ஏற்கனவே சரவணம்பட்டி காவல் நிலையத்தில் வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரியவந்தது. 



இதையடுத்து, விரைந்து நடவடிக்கை எடுத்த போலீசார் சதிஷ், ஹரி, தனபால் மற்றும் சூர்யா ஆகியோரை நேற்று இரவு கைது செய்துள்ளனர். இந்த நிலையில், கைது செய்யப்பட்ட 4 பேருக்கு வரும் 29-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நான்காவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சந்தானகிருஷ்ணசாமி உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...