திருப்பூரில் பழைய அட்டை பெட்டி கிடங்கில் பயங்கர தீ விபத்து : குடியிருப்பு பகுதிகளில் எளிதில் தீ பற்றும் கிடங்குகள் அமைக்கத் தடை

திருப்பூர் : திருப்பூரில் பழைய அட்டை பெட்டி கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்ட நிலையில், குடியிருப்பு பகுதிகளில் எளிதில் தீ பற்றும் கிடங்குகள் அமைக்கக் கூடாது என மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

திருப்பூர் : திருப்பூரில் பழைய அட்டை பெட்டி கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்ட நிலையில், குடியிருப்பு பகுதிகளில் எளிதில் தீ பற்றும் கிடங்குகள் அமைக்கக் கூடாது என மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியை சேர்ந்த கார்த்தீஸ்வரன் (42) என்பவர் திருப்பூர் லட்சுமி நகரில் பழைய பேப்பர் கிடங்கு நடத்தி வருகிறார். இந்த நிலையில், நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் திடீரென பற்றிய தீயில், அட்டை பெட்டிகள், நூல் கோன்களில் தீ பற்றியது. அருகில் இருந்த குடியிருப்பு வாசிகள் சப்தம் எழுப்பியதையடுத்து, கிடங்கின் உள்ளே படுத்திருந்த 8 தொழிலாளர்கள் தப்பி வெளியேறினர். இதனையடுத்து, தகவலறிந்து இரண்டு தீயணைப்பு வாகனங்களில் வந்த திருப்பூர் வடக்கு தீயணைப்பு துறையினர் 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும், தொடர்ந்து புகைந்து வந்ததால் ஜே.சி.பி வாகனத்தின் உதவியுடன் தீயை அணைத்தனர். 



இது குறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் விரைந்து வந்த திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் மற்றும் மாநகராட்சி ஆணையர் சிவகுமார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்தை நேரில் பாரவையிட்டனர். பின்னர், குடியிருப்பு பகுதியின் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கிடங்கால் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதால், இனி மாநகராட்சிக்குட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் எளிதில் தீ பற்றும் கிடங்குகள் அமைக்கக் கூடாது எனவும், ஏற்கனவே அமைக்கப்பட்ட கிடங்குகள் தீயணைப்பு துறையினரின் ஆலோசனைக்குப் பிறகு இடமாற்றம் செய்யப்படும் என மாநகராட்சி ஆணையர் சிவகுமார் ஆணை பிறப்பித்தார்.

Newsletter

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...