கோவை : இடைத்தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கை முன்னிட்டு 4 நாட்களுக்கு மதுபானக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கோவை : இடைத்தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கை முன்னிட்டு 4 நாட்களுக்கு மதுபானக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- வரும் 19-ம் தேதி சூலூர், அரவக்குறிச்சி திருப்பரங்குன்றம் மற்றும் ஒட்டபிடாரம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடக்கும் இடைத்தேர்தலை அமைதியாக நடத்தி முடிக்க வேண்டும். இதற்காக கோவை, திருப்பூர் (சூலுர்), கரூர் (அரவக்குறிச்சி), மதுரை (திருப்பரங்குன்றம், தூத்துக்குடி (ஒட்டபிடாரம்) ஆகிய மாவட்டங்களில் வரும் 17-ம் தேதி காலை 10 மணி முதல் 19-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மூட வேண்டும். அதேபோல, நாடாளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நாளான மே 23-ம் தேதியும் அனைத்து மதுபானக் கடைகளும் மூட வேண்டும், இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- வரும் 19-ம் தேதி சூலூர், அரவக்குறிச்சி திருப்பரங்குன்றம் மற்றும் ஒட்டபிடாரம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடக்கும் இடைத்தேர்தலை அமைதியாக நடத்தி முடிக்க வேண்டும். இதற்காக கோவை, திருப்பூர் (சூலுர்), கரூர் (அரவக்குறிச்சி), மதுரை (திருப்பரங்குன்றம், தூத்துக்குடி (ஒட்டபிடாரம்) ஆகிய மாவட்டங்களில் வரும் 17-ம் தேதி காலை 10 மணி முதல் 19-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மூட வேண்டும். அதேபோல, நாடாளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நாளான மே 23-ம் தேதியும் அனைத்து மதுபானக் கடைகளும் மூட வேண்டும், இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.