குப்பை மற்றும் கழிவுகளால் பொலிவிழந்து காணப்படும் உதகை தேனிலவு படகு இல்லம் : சீரமைக்க சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை

நீலகிரி : உதகை தேனிலவு படகு இல்லம் பகுதியில் கட்டிடக் கழிவுகள் மற்றும் வீணான உடைந்த படகின் பாகங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளதால் பொலிவிழந்து காணப்படுவதாக சுற்றுலாப் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நீலகிரி : உதகை தேனிலவு படகு இல்லம் பகுதியில் கட்டிடக் கழிவுகள் மற்றும் வீணான உடைந்த படகின் பாகங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளதால் பொலிவிழந்து காணப்படுவதாக சுற்றுலாப் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.



உதகைக்கு சுற்றுலா வரும் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உதகை ஏரியின் மறு கரையில் புதிதாக தேனிலவு படகு இல்லம் அமைக்கப்பட்டது. ஒரு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட படகு இல்லம் மற்றும் நடைபாதை சில ஆண்டுகளில் பொலிவில்லாமல் காணப்பட்டது. நடைபாதையையொட்டி, வனப்பகுதி இருப்பதால், காலை நேரத்தில் நடை பயிற்சி செல்லும் பொதுமக்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டது. 

இந்த நிலையில், தேனிலவு படகு இல்லம் சீரமைப்பு பணிக்காக 48 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன்மூலம், புதிய படகு இல்லத்தின் நடைபாதைகள், கூரைகள் மற்றும் படகு நிறுத்தும் தளம் ஆகியவை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இவை தரமில்லாமல் இருப்பதாலும், புதர்கள் மண்டி கிடப்பதாலும், சுற்றுலாப் பயணிகள் முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், கட்டிடக் கழிவுகள் மற்றும் வீணான உடைந்த படகின் பாகங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளதால் தேனிலவு படகு இல்லம் பொலிவை இழந்துள்ளது. எனவே, தேனிலவு படகு இல்லத்தை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...