கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 58 ஆயிரம் எல்.இ.டி. தெரு விளக்குக்கள் பொருத்தும் பணி இந்த மாதம் தொடக்கம்

கோவை : கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பழுதடைந்த தெருவிளக்குகளை மாற்றுவற்காக வாங்கப்பட்ட 58 ஆயிரம் எல்.இ.டி. தெரு விளக்குக்கள் பொருத்தும் பணி இந்த மாதத்தில் தொடங்குகிறது.

கோவை : கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பழுதடைந்த தெருவிளக்குகளை மாற்றுவற்காக வாங்கப்பட்ட 58 ஆயிரம் எல்.இ.டி. தெரு விளக்குக்கள் பொருத்தும் பணி இந்த மாதத்தில் தொடங்குகிறது.



கடந்த 2011-ம் ஆண்டு இருந்த 60 வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டதில் 100 வார்டுகளாக அதிகரிக்கப்பட்டது. இந்த வார்டுகளில் தெருவிளக்குகள் பராமரிக்கும் பணி தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், முறையான பராமரிப்பின்மை மற்றும் சரியாக செயல்படவில்லை என பொதுமக்கள் அடுத்தடுத்து புகார்களை தெரிவித்து வந்தனர். இதையடுத்து, புதிதாக சேர்க்கப்பட்ட 40 வார்டுகளில் ஒப்பந்ததாரர்களின் மூலம் தெருவிளக்குகள் மாற்றப்பட்டு விட்டன. 

தற்போது, பழைய 60 வார்டுகளில் இருக்கும் தெரு விளக்குகளை மாற்றும் பணி தனியாரிடம் வழங்கியும் நிலுவையில் இருந்து வந்தது. இந்த நிலையில், வரும் மே 24-ம் தேதி முதல் மாநகராட்சிக்குட்பட்ட பழைய வார்டுகளில் தெரு விளக்குகளை மாற்றும் பணி தொடங்குகிறது. இத்ஜற்காக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.74 கோடி மதிப்பில் 58,000 தெருவிளக்குகள் வாங்கப்பட்டுள்ளன. மேலும், 6 மாதங்களுக்குள் இந்தப் பணிகளை முடித்து கொடுக்க வேண்டும் என ஒப்பந்ததாரருக்கு கோவை மாநகராட்சி கெடு விதித்துள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...