கோவை: சூலூரில் பிரச்சாரம் செய்ய எதிர்ப்பு தெரிவிக்கும் நிர்வாகியின் மனைவி யாரோ ஒருவரின் தூண்டுதலில் பேசுகிறார் என கமல்ஹாசன் விளக்கமளித்துள்ளார்.
கோவை: சூலூரில் பிரச்சாரம் செய்ய எதிர்ப்பு தெரிவிக்கும் நிர்வாகியின் மனைவி யாரோ ஒருவரின் தூண்டுதலில் பேசுகிறார் என கமல்ஹாசன் விளக்கமளித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், “ நான்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் மக்கள் நீதி மய்யத்திற்கு மிகப்பெரிய சந்தோசத்தை தந்துள்ளது,”என்றார். அப்போது, பல்லடம் பகுதியில் மக்கள் நீதி மய்ய நிர்வாகி பாலமுருகன் உயிரிழந்த விவகாரத்தில் கமல்ஹாசன் பரப்புரை செய்ய தடை விதிக்க வேண்டும் என அவரது மனைவி விஜயகுமாரி புகாரளித்துள்ளது தொடர்பான கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், “கணவனை இழந்த மனைவியின் குரல் அல்ல. யாரோ ஒருவரின் தூண்டுதலால் பேசுகிறார். மக்கள் நீதி மய்யத்தினர் யாரும் அவரது குடும்பத்தை பார்க்க செல்லவில்லை என்பது தவறான குற்றச்சாட்டு. இடைத்தரகர்கள் புகுந்து தங்களிடம் காசு கேட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு எனது உறவினர் மரணத்திற்கு கூட என்னால் செல்ல முடியவில்லை. அப்படியிருக்கையில் எல்லோரது மரணத்திற்கும் நான் செல்லவில்லை என குற்றச்சாட்டு கூறுவது ஏற்புடையது அல்ல.
மேலும், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலை தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் சவுகரியம் போல பேசுகின்றனர். இவ்விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும்.
தேர்தல் முடிவுக்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி என தி.மு.க.வினர் கூறி வருகின்றனர். அவர்களது கருத்தை எங்களுக்கு வாழ்த்து சொல்வதாக கருதுகிறேன்,” என பதிலளித்தார்.