கோத்தகிரியில் பழங்குடியினரின் பாரம்பரிய விழாவாக கொண்டாடப்பட்ட டாக்டர் நரசிம்மனின் 102-வது பிறந்த நாள்

நீலகிரி : நீலகிரி ஆதிவாசிகள் நல சங்கத்தின் (நாவா) நிறுவனர் டாக்டர் நரசிம்மனின் 102-வது பிறந்த நாள் விழா, பழங்குடியினரின் பாரம்பரிய விழாவாக கொண்டாடப்பட்டது.

நீலகிரி : நீலகிரி ஆதிவாசிகள் நல சங்கத்தின் (நாவா) நிறுவனர் டாக்டர் நரசிம்மனின் 102-வது பிறந்த நாள் விழா, பழங்குடியினரின் பாரம்பரிய விழாவாக கொண்டாடப்பட்டது.

கோத்தகிரி 'நாவா' அலுவலக வளாகத்தில் நடந்த இவ்விழாவில், கோடை விழா கண்காட்சியும் தொடங்கி வைக்கப்பட்டது. அதில், பழங்குடியினரின் கைவினை பொருட்கள், வாழ்வியல் புகைப்பட கண்காட்சி, பாரம்பரிய மூலிகை மருந்துகள் மற்றும் 'சைல்ட் லைன்' விழிப்புணர்வு உள்ளிட்டவை குறித்த அரங்குகள் இடம்பெற்றன. கண்காட்சியில் இடம்பெற்ற நீலகிரி பழங்குடியின மக்களின் மாதிரி குடில்கள் மற்றும் நடனம் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. மூலிகை மருந்து குறித்த அரங்கு பெரும் பயனுள்ளதாக அமைந்தது.



இது குறித்து நிர்வாகிகள் கூறுகையில், “பழங்குடியினர் கண்காட்சியில் பல்வேறு கைவினை பொருட்கள் வைக்கப்பட்டுள்ளதால், அதனை உள்ளூர் மக்களுடன், சுற்றுலாப் பயணிகளும் கண்டுகளித்தனர். மேலும், இங்குள்ள புகைப்படங்கள், மாணவ, மாணவியருக்கு பயனுள்ளதாக உள்ளன. பொதுமக்கள் பார்வைக்காக வரும் 27-ம் தேதி வரை கண்காட்சி நடத்தப்பட உள்ளது,”என்றனர். 



இந்த நிகழ்ச்சியில், நாவா செயலாளர் ஆல்வாஸ், பொருளாளர் சண்முகன், கோத்தகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...