உதகையில் பொலிவுபடுத்தப்பட்ட ஆடம்ஸ் நீரூற்று : கண்டு ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள்

நீலகிரி : உதகையில் உள்ள 'ஆடம்ஸ்' நீரூற்று பொலிவுப்படுத்தும் பணி நிறைவடைந்ததால், தற்போது இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இதனை கண்டு ரசித்து செல்கின்றனர்.

நீலகிரி : உதகையில் உள்ள 'ஆடம்ஸ்' நீரூற்று பொலிவுப்படுத்தும் பணி நிறைவடைந்ததால், தற்போது இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இதனை கண்டு ரசித்து செல்கின்றனர்.

உதகை சேரிங்கிராஸ் பகுதியில் ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட, 'ஆடம்ஸ்' செயற்கை நீரூற்று உள்ளது. உதகையின் பாரம்பரியமிக்க சின்னங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த பகுதியை, சுற்றுலாப் பயணிகள் வெகுவாக ரசித்து செல்கின்றனர். இரவு நேரங்களில், இங்கு நிற்கும் சுற்றுலாப் பயணிகள், விளக்குடன் கூடிய நீரூற்று ஒளியில், புகைப்படம் எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். தற்போது, சீசன் நடந்து வருவதால் இந்த 'ஆடம்ஸ்' நீரூற்றை பொலிவுப்படுத்த நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டு, அதற்கான பணிகளும் தீவிரமாக நடந்து வந்தது. தற்போது, வர்ணம் பூசும் பணிகள் நிறைவடைந்து புதுப் பொலிவுடன் காணப்படுவதால், இதனை இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வெகுவாக ரசித்து செல்கின்றனர். 

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...