நீலகிரி : உதகையில் உள்ள 'ஆடம்ஸ்' நீரூற்று பொலிவுப்படுத்தும் பணி நிறைவடைந்ததால், தற்போது இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இதனை கண்டு ரசித்து செல்கின்றனர்.
நீலகிரி : உதகையில் உள்ள 'ஆடம்ஸ்' நீரூற்று பொலிவுப்படுத்தும் பணி நிறைவடைந்ததால், தற்போது இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இதனை கண்டு ரசித்து செல்கின்றனர்.
உதகை சேரிங்கிராஸ் பகுதியில் ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட, 'ஆடம்ஸ்' செயற்கை நீரூற்று உள்ளது. உதகையின் பாரம்பரியமிக்க சின்னங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த பகுதியை, சுற்றுலாப் பயணிகள் வெகுவாக ரசித்து செல்கின்றனர். இரவு நேரங்களில், இங்கு நிற்கும் சுற்றுலாப் பயணிகள், விளக்குடன் கூடிய நீரூற்று ஒளியில், புகைப்படம் எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். தற்போது, சீசன் நடந்து வருவதால் இந்த 'ஆடம்ஸ்' நீரூற்றை பொலிவுப்படுத்த நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டு, அதற்கான பணிகளும் தீவிரமாக நடந்து வந்தது. தற்போது, வர்ணம் பூசும் பணிகள் நிறைவடைந்து புதுப் பொலிவுடன் காணப்படுவதால், இதனை இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வெகுவாக ரசித்து செல்கின்றனர்.
உதகை சேரிங்கிராஸ் பகுதியில் ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட, 'ஆடம்ஸ்' செயற்கை நீரூற்று உள்ளது. உதகையின் பாரம்பரியமிக்க சின்னங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த பகுதியை, சுற்றுலாப் பயணிகள் வெகுவாக ரசித்து செல்கின்றனர். இரவு நேரங்களில், இங்கு நிற்கும் சுற்றுலாப் பயணிகள், விளக்குடன் கூடிய நீரூற்று ஒளியில், புகைப்படம் எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். தற்போது, சீசன் நடந்து வருவதால் இந்த 'ஆடம்ஸ்' நீரூற்றை பொலிவுப்படுத்த நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டு, அதற்கான பணிகளும் தீவிரமாக நடந்து வந்தது. தற்போது, வர்ணம் பூசும் பணிகள் நிறைவடைந்து புதுப் பொலிவுடன் காணப்படுவதால், இதனை இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வெகுவாக ரசித்து செல்கின்றனர்.