சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட தகவல்களால் மேட்டுப்பாளையத்தில் வழிதவறிய சிறுவன் பெற்றோர்களால் மீட்பு

கோவை : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வழிதவறிய சிறுவனை, சமூகவலைதளங்களால் பகிரப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பெற்றோர்கள் காவல்நிலையத்தில் இருந்து மீட்டனர்.

கோவை : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வழிதவறிய சிறுவனை, சமூகவலைதளங்களால் பகிரப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பெற்றோர்கள் காவல்நிலையத்தில் இருந்து மீட்டனர்.

சுமார் 3 வயது மதிக்கத்தக்க சிறுவன் நேற்று மேட்டுப்பாளையம் காவல்நிலையம் அருகே உள்ள அரோமா பேக்கரி முன்பு வழி தெரியாமல் சுற்றித்திரிந்து கொண்டிருந்தான். இந்த சிறுவனை நமது மேட்டுப்பாளையம் சமூக ஆர்வலர் கணேசன் மீட்டு, மேட்டுப்பாளையம் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். காவல்துறை அதிகாரிகள் அச்சிறுவனை விசாரித்த பொழுது, அவனால் அவனது பெற்றோர் மற்றும் ஊரின் விபரங்களை சொல்லத் தெரியவில்லை. மேலும், மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் இச்சிறுவன் இருப்பதாகவும், சிறுவனை மீட்க சம்பந்தப்பட்டவர்கள் போலீசாரை தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 



இந்த தகவல்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. அதன் மூலம் தகவல் தெரிந்து கொண்ட சிறுவனின் பெற்றோர், மேட்டுப்பாளையம் காவல்நிலையத்திற்கு வந்து சிறுவனை மீட்டுச் சென்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...