குன்னூரில் அணையில் மீன்பிடிக்க சென்ற பொறியியல் மாணவன் உட்பட இருவர் நீரில் மூழ்கி பலி

நீலகிரி : குன்னூர் ரேலியா அணையில் மீன்பிடிக்க சென்ற பொறியியல் மாணவன் உட்பட இரண்டு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

நீலகிரி : குன்னூர் ரேலியா அணையில் மீன்பிடிக்க சென்ற பொறியியல் மாணவன் உட்பட இரண்டு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கம்பிசோலை காந்திநகர் பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ் (17), ரகு (13), பிரதீப், பிரசாத், கெவின் ஆகிய ஐந்து பேரும் அருகே இருக்கும் ரேலியா அணையில் மீன் பிடிக்க நேற்று சென்றனர். அலெக்ஸ் மற்றும் ரகு ஆகியோர் சற்று ஆழமான பகுதிக்கு சென்று மீன் பிடிக்க முயற்சி செய்தனர். அப்போது, அலெக்ஸ் கால் வழுக்கி உள்ளே சென்றார். இதனால், மூச்சுத் திணறல் ஏற்பட்டு பரிதவித்துக் கொண்டிருந்த அவர், கைகளை அசைத்து காப்பாற்ற சைகை செய்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரகு, தன் கண் முன்னே அலெக்ஸ் போராடுவதை பார்த்து கையை நீட்டி காப்பாற்ற முயற்சி செய்தார். இதில், ரகுவும் நீரில் மூழ்கினார். சிறிது நேரத்தில் இருவரும் இறந்தனர்.



நண்பர்கள் இருவரும் இறந்ததை பார்த்த பிரதீப், பிரசாத் ஆகியோர் பயத்தில் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அங்கு அழுதுக் கொண்டிருந்த கெவின் மட்டும் அங்கு வந்த பொதுமக்களிடம் கூறினான். தகவல் அறிந்து சென்ற குன்னூர் தீயணைப்பு துறை அதிகாரி மோகன், ராஜகோபால் மற்றும் ஊழியர்கள், ரேலியா அணையில் இறங்கி இருவரது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



இறந்த அலெக்ஸ் கேத்தி தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இதனிடையே, அணையின் நீரில் மூழ்கி 2 பேர் உயிரிழந்த அருவங்காடு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...