கோவை : பெரியநாயக்கன் பாளையம் அருகே தனியார் பேருந்து மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
கோவை : பெரியநாயக்கன் பாளையம் அருகே தனியார் பேருந்து மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் (TN 66 E 9797) என்ற எண் கொண்ட தனியார் பேருந்து மேட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இதேபோல, பெரியநாயக்கன்பாளையம் பகுதியிலிருந்து துடியலூரை நோக்கி ஸ்டீபன் பிரபு (22) என்ற இளைஞர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருதார். அப்போது, அதிவேகமாக வந்த தனியார் பேருந்தின் முன்பு கட்டுப்பாட்டை இழந்த ஸ்டீபன் விழுந்துள்ளார். இதில், பேருந்தின் சக்கரம் ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதையடுத்து, பேருந்தின் அடியில் இருந்த நபரை எடுப்பதற்காக பொக்லைன் உதவியுடன் பேருந்தை கவிழ்த்தனர். பின்னர், இறந்த நபரின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் (TN 66 E 9797) என்ற எண் கொண்ட தனியார் பேருந்து மேட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இதேபோல, பெரியநாயக்கன்பாளையம் பகுதியிலிருந்து துடியலூரை நோக்கி ஸ்டீபன் பிரபு (22) என்ற இளைஞர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருதார். அப்போது, அதிவேகமாக வந்த தனியார் பேருந்தின் முன்பு கட்டுப்பாட்டை இழந்த ஸ்டீபன் விழுந்துள்ளார். இதில், பேருந்தின் சக்கரம் ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதையடுத்து, பேருந்தின் அடியில் இருந்த நபரை எடுப்பதற்காக பொக்லைன் உதவியுடன் பேருந்தை கவிழ்த்தனர். பின்னர், இறந்த நபரின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.