கோவை : மதுக்கரை அருகே கோவில் திருவிழாவில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை : மதுக்கரை அருகே கோவில் திருவிழாவில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுக்கரை அருகே குமிட்டிபதி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் நேற்று சித்திரை திருவிழா நடைபெற்றது. இதையொட்டி, தாழ்த்தப்பட்ட மக்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றுள்ளனர். அப்போது, ஜமாப் அடித்தபடியே தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் சென்றதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஜமாப் அடிக்க கூடாது என கூறியதை ஏற்க மறுத்ததால், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் மற்றும் பெண்கள் மீது மற்றொரு தரப்பினர், சாதிப்பெயரை சொல்லி இழிவுபடுத்திபடி தடி மற்றும் கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், காயமடைந்த 6 பேர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், தாழ்த்தப்பட்ட மக்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், பாதுகாப்பு அளிக்கக் கோரியும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதன் பின்னர், மாவட்ட ஆட்சியரிடம் உரிய நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் இருந்து மனு அளிக்கப்பட்டது.

மதுக்கரை அருகே குமிட்டிபதி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் நேற்று சித்திரை திருவிழா நடைபெற்றது. இதையொட்டி, தாழ்த்தப்பட்ட மக்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றுள்ளனர். அப்போது, ஜமாப் அடித்தபடியே தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் சென்றதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஜமாப் அடிக்க கூடாது என கூறியதை ஏற்க மறுத்ததால், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் மற்றும் பெண்கள் மீது மற்றொரு தரப்பினர், சாதிப்பெயரை சொல்லி இழிவுபடுத்திபடி தடி மற்றும் கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், காயமடைந்த 6 பேர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், தாழ்த்தப்பட்ட மக்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், பாதுகாப்பு அளிக்கக் கோரியும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதன் பின்னர், மாவட்ட ஆட்சியரிடம் உரிய நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் இருந்து மனு அளிக்கப்பட்டது.