நீலகிரி : கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில், உதகையை அடுத்த பகல்கோடு மந்து என்றழைக்கப்படும் சூட்டிங் மட்டம் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.

ஆண்டுதோறும் மே மாதங்களில் கோடை சீசன் நிலவுவது வழக்கம். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருவது சூட்டிங் மட்டம் என்றழைக்கப்படும் பகல்கோடு மந்து.
சூட்டிங் மட்டம் என்று பெயர் வர தமிழ் உட்பட பல மொழி படங்கள் இப்பகுதியில் படமாக்கப்பட்டுள்ளதே இதற்கு காரணம். செங்குத்தான இப்பகுதியில் பாம்பு போன்ற வளைவுகளில் நடைபாதையில் நடந்து செல்வது சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு புது அனுபவமாக உள்ளது. மலையின் மேல் பகுதிக்கு சென்றால் அழகான மலைகள், இயற்கை சூழ்நிலைகளை கண்டு ரசித்து செல்கின்றனர்.
இப்பகுதி உதகை, கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதால் கேரளா, கர்நாடகாவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. தோடர் இன மக்கள் இப்பகுதியை பராமரித்து வருகின்றனர். இதன் நுழைவு வாயில் பகுதியில் தோடர் இன மக்களின் பாரம்பரிய கலை நயத்துடன் டிக்கெட் வழங்கும் இடம், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.

கோடை வெயிலை சமாளிக்க இப்பகுதியில் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவு குவிந்து வருவதால், சுற்றலாத் தொழிலை நம்பியுள்ள வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆண்டுதோறும் மே மாதங்களில் கோடை சீசன் நிலவுவது வழக்கம். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருவது சூட்டிங் மட்டம் என்றழைக்கப்படும் பகல்கோடு மந்து.
சூட்டிங் மட்டம் என்று பெயர் வர தமிழ் உட்பட பல மொழி படங்கள் இப்பகுதியில் படமாக்கப்பட்டுள்ளதே இதற்கு காரணம். செங்குத்தான இப்பகுதியில் பாம்பு போன்ற வளைவுகளில் நடைபாதையில் நடந்து செல்வது சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு புது அனுபவமாக உள்ளது. மலையின் மேல் பகுதிக்கு சென்றால் அழகான மலைகள், இயற்கை சூழ்நிலைகளை கண்டு ரசித்து செல்கின்றனர்.
இப்பகுதி உதகை, கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதால் கேரளா, கர்நாடகாவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. தோடர் இன மக்கள் இப்பகுதியை பராமரித்து வருகின்றனர். இதன் நுழைவு வாயில் பகுதியில் தோடர் இன மக்களின் பாரம்பரிய கலை நயத்துடன் டிக்கெட் வழங்கும் இடம், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.

கோடை வெயிலை சமாளிக்க இப்பகுதியில் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவு குவிந்து வருவதால், சுற்றலாத் தொழிலை நம்பியுள்ள வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.