கோவை : பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், கோவை மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகளில் 94. 72 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கோவை : பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், கோவை மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகளில் 94. 72 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பிளஸ் 1 பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 6ம் தேதி முதல் 22ம் தேதி வரையில் நடைபெற்றது. இதில், தமிழகம், புதுச்சேரியில் 7,278 பள்ளிகளில் இருந்து 8,16,618 மாணவ, மாணவியர் மற்றும் 5,032 தனித்தேர்வர்கள் என மொத்தம் 8,21,650 பேர் புதிய பாடத் திட்டத்தின் கீழ் முதல் பொதுத் தேர்வினை எழுதினர். இந்தப் பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது. இதில், தமிழகம் முழுவதும் மொத்தம் 95 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கோவை மாநகராட்சியின் கீழ் உள்ள 16 பள்ளிகளில் 94. 72 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டு 88.61 ஆக இருந்தது. இந்த ஆண்டில் 6.11 சதவீதம் கூடுதல் தேர்ச்சியாகும். மொத்தம் 2,139 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியதில், 2,026 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல, ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மட்டுமே 100 சதவீதம் தேர்ச்சி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
பிளஸ் 1 பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 6ம் தேதி முதல் 22ம் தேதி வரையில் நடைபெற்றது. இதில், தமிழகம், புதுச்சேரியில் 7,278 பள்ளிகளில் இருந்து 8,16,618 மாணவ, மாணவியர் மற்றும் 5,032 தனித்தேர்வர்கள் என மொத்தம் 8,21,650 பேர் புதிய பாடத் திட்டத்தின் கீழ் முதல் பொதுத் தேர்வினை எழுதினர். இந்தப் பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது. இதில், தமிழகம் முழுவதும் மொத்தம் 95 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கோவை மாநகராட்சியின் கீழ் உள்ள 16 பள்ளிகளில் 94. 72 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டு 88.61 ஆக இருந்தது. இந்த ஆண்டில் 6.11 சதவீதம் கூடுதல் தேர்ச்சியாகும். மொத்தம் 2,139 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியதில், 2,026 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல, ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மட்டுமே 100 சதவீதம் தேர்ச்சி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.