நீலகிரி : கூடலூர் அருகே தமிழக - கர்நாடக அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர்.
நீலகிரி : கூடலூர் அருகே தமிழக - கர்நாடக அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர்.
கூடலூரில் இருந்து மைசூர் செல்லும் வனப்பகுதி சாலையில் தமிழக - கர்நாடக அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், தமிழக அரசுப் பேருந்தின் ஓட்டுநர் ஜலில் (40) மற்றும் கர்நாடகா அரசுப் பேருந்து ஓட்டுநர் பண்ணாரி (45) ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். மேலும், இரு பேருந்துகளிலும் பயணம் செய்து வந்த பயணிகளில் 20-க்கும் மேற்பட்டோர் லேசான காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் கூடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

படுகாயமடைந்த இரு பேருந்துகளின் ஓட்டுநர்களில் ஜலில் கேரளா மருத்துவமனையிலும், பண்ணாரி மைசூர் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கூடலூரில் இருந்து மைசூர் செல்லும் வனப்பகுதி சாலையில் தமிழக - கர்நாடக அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், தமிழக அரசுப் பேருந்தின் ஓட்டுநர் ஜலில் (40) மற்றும் கர்நாடகா அரசுப் பேருந்து ஓட்டுநர் பண்ணாரி (45) ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். மேலும், இரு பேருந்துகளிலும் பயணம் செய்து வந்த பயணிகளில் 20-க்கும் மேற்பட்டோர் லேசான காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் கூடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

படுகாயமடைந்த இரு பேருந்துகளின் ஓட்டுநர்களில் ஜலில் கேரளா மருத்துவமனையிலும், பண்ணாரி மைசூர் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.