நீலகிரி : கூடலூரில் வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களுக்கு மர்மநபர்கள் தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நீலகிரி : கூடலூரில் வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களுக்கு மர்மநபர்கள் தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த மரப்பாலம் சீனக் கொல்லி பகுதியைச் சேர்ந்தவர் முத்துகுமார். இவர், வழக்கம் போல் இரவு 8 மணியளவில் வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள தற்காலிக செட்டில் தனது இரண்டு இருசக்கர வாகனங்களை நிறுத்தி விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இரவு 11 மணியளவில், இரு வாகனங்களும் நிறுத்தப்பட்டு இருந்த இடத்தில் இருந்து வித்தியாசமான சத்தம் கேட்டுள்ளது.

இதையடுத்து, வீட்டில் இருந்து ஜன்னல் வழியாக பார்த்தபோது வாகனங்கள் எரிந்து கொண்டிருப்பதை பார்த்துள்ளனர். அப்பகுதியில் யானைகள் நடமாட்டம் இருப்பதால், யானைகளின் நடமாட்டம் இல்லாததை உறுதி செய்து கொண்டு வெளியே வந்து சேருவதற்குள் இரண்டு வாகனங்களும் முழுமையாக எரிந்து சேதம் அடைந்தன. இதுகுறித்து உடனடியாக தேவாலா காவல் நிலையத்திற்கு முத்துக்குமார் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில், போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த மரப்பாலம் சீனக் கொல்லி பகுதியைச் சேர்ந்தவர் முத்துகுமார். இவர், வழக்கம் போல் இரவு 8 மணியளவில் வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள தற்காலிக செட்டில் தனது இரண்டு இருசக்கர வாகனங்களை நிறுத்தி விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இரவு 11 மணியளவில், இரு வாகனங்களும் நிறுத்தப்பட்டு இருந்த இடத்தில் இருந்து வித்தியாசமான சத்தம் கேட்டுள்ளது.

இதையடுத்து, வீட்டில் இருந்து ஜன்னல் வழியாக பார்த்தபோது வாகனங்கள் எரிந்து கொண்டிருப்பதை பார்த்துள்ளனர். அப்பகுதியில் யானைகள் நடமாட்டம் இருப்பதால், யானைகளின் நடமாட்டம் இல்லாததை உறுதி செய்து கொண்டு வெளியே வந்து சேருவதற்குள் இரண்டு வாகனங்களும் முழுமையாக எரிந்து சேதம் அடைந்தன. இதுகுறித்து உடனடியாக தேவாலா காவல் நிலையத்திற்கு முத்துக்குமார் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில், போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.