உதகை, குன்னூரில் 2-வது நாளாக பெய்யும் மழை : சுற்றுலாப் பயணிகள் தங்கும் விடுதிகளிலேயே முடக்கம்

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையினால் சுற்றுலா தலங்களுக்குச் செல்ல முடியாமல், சுற்றுலாப் பயணிகள் தங்கும் விடுதிகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையினால் சுற்றுலா தலங்களுக்குச் செல்ல முடியாமல், சுற்றுலாப் பயணிகள் தங்கும் விடுதிகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். 

நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் குன்னூரில் கடந்த சில நாட்களாக வெயிலுடன் கூடிய இதமான காலநிலை நிலவியது. தற்போது கோடை சீசன் துவங்கியுள்ளதால் இந்த காலநிலையை சுற்றுலாப் பயணிகள் வெகுவாக ரசித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று (தி்ங்கட்கிழமை) பிற்பகல் மழை பெய்த நிலையில், இன்று உதகை, குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. 



சீரான இடைவெளியில் விட்டு விட்டு பெய்து வரும் இந்த மழையினால், மழை நீர் சாலைகளில் கரை புரண்டு ஓடுகிறது. இதன் காரணமாக, சுற்றுலாப் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். பலர் தங்கும் விடுதிகளிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மழை அணைப் பகுதிகளிலும் பெய்துள்ளதால், கோடையில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை ஓரளவு சமாளிக்க முடியும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...