திருப்பூர் : திருப்பூரில் வீட்டில் இருந்த பனியன் கம்பெனி டெய்லர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
திருப்பூர் : திருப்பூரில் வீட்டில் இருந்த பனியன் கம்பெனி டெய்லர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
திருப்பூர் செரங்காடு பிள்ளையார் கோவில் வீதியில் வசித்து வந்தவர் சிவக்குமார். கடந்த சில வருடங்களாக மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்த இவர், தனியார் பின்னலாடை நிறுவனத்தில் டெய்லராக பணிபுரிந்து வருகிறார். பிள்ளையார் கோவில் வீதியில் சொந்தமாக உள்ள வீட்டில் தனது தாயுடன் வசித்து வந்தார். நேற்றைய தினம் அவரது தாயார் திருச்செந்தூர் சென்றிருந்த நிலையில், நேற்றிரவு தனியாக இருந்துள்ளார். இந்நிலையில், ஊரிலிருந்து திரும்பி வந்த சிவக்குமாரின் தாய் வீட்டின் கதவை திறந்த போது சிவக்குமார் கத்தியால் குத்தப்பட்ட நிலையில், இரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து வந்த ஊரக போலீசார் கைரேகை நிபுணர்களுடன் மற்றும் மோப்பநாயுடன் சோதனை மேற்கொண்டனர். பின்பு உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் செரங்காடு பிள்ளையார் கோவில் வீதியில் வசித்து வந்தவர் சிவக்குமார். கடந்த சில வருடங்களாக மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்த இவர், தனியார் பின்னலாடை நிறுவனத்தில் டெய்லராக பணிபுரிந்து வருகிறார். பிள்ளையார் கோவில் வீதியில் சொந்தமாக உள்ள வீட்டில் தனது தாயுடன் வசித்து வந்தார். நேற்றைய தினம் அவரது தாயார் திருச்செந்தூர் சென்றிருந்த நிலையில், நேற்றிரவு தனியாக இருந்துள்ளார். இந்நிலையில், ஊரிலிருந்து திரும்பி வந்த சிவக்குமாரின் தாய் வீட்டின் கதவை திறந்த போது சிவக்குமார் கத்தியால் குத்தப்பட்ட நிலையில், இரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து வந்த ஊரக போலீசார் கைரேகை நிபுணர்களுடன் மற்றும் மோப்பநாயுடன் சோதனை மேற்கொண்டனர். பின்பு உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.