கோவை : கோவை மாநகர் பகுதிகளில் ரசாயன முறைப்படி பழுக்க வைக்கப்பட்ட பழங்களை பறிமுதல் செய்து உணவு பாதுகாப்புத் துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.
கோவை : கோவை மாநகர் பகுதிகளில் ரசாயன முறைப்படி பழுக்க வைக்கப்பட்ட பழங்களை பறிமுதல் செய்து உணவு பாதுகாப்புத் துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.

கோவை மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் பா. விஜயலலிதாம்பிகையின் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பல குழுக்களாக கோவை மாநகர் பகுதிகளில் உள்ள பழங்கள் விற்பனை கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.

உக்கடம், காந்திபுரம், சூலூர், மேட்டுப்பாளையம் மற்றும் பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 68 கடைகளில் நடைபெற்ற இந்த சோதனையின் போது, பழங்கள் ரசாயன கற்களைக் கொண்டு செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படுகிறதா..? என ஆய்வு செய்யப்பட்டது.

இந்த சோனையின் போது, இரசாயன பொடியைப் பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்ட 489 கிலோ மாம்பழங்களும், 1,110 கிலோ இதர பழங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு 45,000 ஆகும்.

கோவை மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் பா. விஜயலலிதாம்பிகையின் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பல குழுக்களாக கோவை மாநகர் பகுதிகளில் உள்ள பழங்கள் விற்பனை கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.

உக்கடம், காந்திபுரம், சூலூர், மேட்டுப்பாளையம் மற்றும் பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 68 கடைகளில் நடைபெற்ற இந்த சோதனையின் போது, பழங்கள் ரசாயன கற்களைக் கொண்டு செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படுகிறதா..? என ஆய்வு செய்யப்பட்டது.

இந்த சோனையின் போது, இரசாயன பொடியைப் பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்ட 489 கிலோ மாம்பழங்களும், 1,110 கிலோ இதர பழங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு 45,000 ஆகும்.