கோவை மாநகர் பகுதிகளில் ரசாயன முறைப்படி பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் பறிமுதல்

கோவை : கோவை மாநகர் பகுதிகளில் ரசாயன முறைப்படி பழுக்க வைக்கப்பட்ட பழங்களை பறிமுதல் செய்து உணவு பாதுகாப்புத் துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.

கோவை : கோவை மாநகர் பகுதிகளில் ரசாயன முறைப்படி பழுக்க வைக்கப்பட்ட பழங்களை பறிமுதல் செய்து உணவு பாதுகாப்புத் துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். 



கோவை மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் பா. விஜயலலிதாம்பிகையின் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பல குழுக்களாக கோவை மாநகர் பகுதிகளில் உள்ள பழங்கள் விற்பனை கடைகளில் சோதனை மேற்கொண்டனர். 



உக்கடம், காந்திபுரம், சூலூர், மேட்டுப்பாளையம் மற்றும் பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 68 கடைகளில் நடைபெற்ற இந்த சோதனையின் போது, பழங்கள் ரசாயன கற்களைக் கொண்டு செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படுகிறதா..? என ஆய்வு செய்யப்பட்டது. 



இந்த சோனையின் போது, இரசாயன பொடியைப் பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்ட 489 கிலோ மாம்பழங்களும், 1,110 கிலோ இதர பழங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு 45,000 ஆகும். 

Newsletter

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...