திருப்பூர் : திருப்பூரில் வீட்டை வாங்குவதற்காக ரூ. 14 லட்சம் முன்பணம் கொடுத்த நிலையில், மற்றொருவருக்கு வீட்டை விற்பனை செய்து விட்டு, வீட்டில் இருந்த பொருட்களை தெருவில் தூக்கி வீசிய சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் : திருப்பூரில் வீட்டை வாங்குவதற்காக ரூ. 14 லட்சம் முன்பணம் கொடுத்த நிலையில், மற்றொருவருக்கு வீட்டை விற்பனை செய்து விட்டு, வீட்டில் இருந்த பொருட்களை தெருவில் தூக்கி வீசிய சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டம் நெகமம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் அரசு போக்குவரத்து பணிமனையில் பணியாற்றுகிறார். இவருக்கு திருப்பூர் - தாராபுரம் சாலை சேரன் தொழிலாளர் காலனியில் உள்ள தனது வீட்டை, அதில் வாடகைக்கு இருந்த பழனியப்பன், சரோஜினி தம்பதியினருக்கு கடந்த 2016ம் ஆண்டு விற்பனை செய்வதாகக் கூறி ரூ. 14 லட்சம் முன்பணமாக பெற்றுள்ளார். மேலும், மீதிப் பணம் கொடுத்ததும் பத்திரப்பதிவு செய்வதாக தெரிவித்திருந்த நிலையில், மீதி பணத்தைப் பெற்று விட்டு பத்திரப்பதிவு செய்வதை சுப்பிரமணி தவிர்த்து வந்தார். இந்த சூழலில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தாராபுரம் வட்டமலை புதூரை சேர்ந்த சிதம்பரம் என்பவருக்கு அந்த வீட்டை விற்பனை செய்துள்ளார்.
இது குறித்து அறிந்த பழனியப்பன் திருப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில், வீட்டை விலைக்கு வாங்கிய சிதம்பரம் 50-க்கும் மேற்பட்டோருடன் பழனியப்பன் குடியிருந்த வீட்டில் அத்துமீறி நுழைந்துப் பொருட்களை சாலையில் வீசி எரிந்துள்ளனர். இது தொடர்பாக, சரோஜினி ஊரக காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் நெகமம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் அரசு போக்குவரத்து பணிமனையில் பணியாற்றுகிறார். இவருக்கு திருப்பூர் - தாராபுரம் சாலை சேரன் தொழிலாளர் காலனியில் உள்ள தனது வீட்டை, அதில் வாடகைக்கு இருந்த பழனியப்பன், சரோஜினி தம்பதியினருக்கு கடந்த 2016ம் ஆண்டு விற்பனை செய்வதாகக் கூறி ரூ. 14 லட்சம் முன்பணமாக பெற்றுள்ளார். மேலும், மீதிப் பணம் கொடுத்ததும் பத்திரப்பதிவு செய்வதாக தெரிவித்திருந்த நிலையில், மீதி பணத்தைப் பெற்று விட்டு பத்திரப்பதிவு செய்வதை சுப்பிரமணி தவிர்த்து வந்தார். இந்த சூழலில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தாராபுரம் வட்டமலை புதூரை சேர்ந்த சிதம்பரம் என்பவருக்கு அந்த வீட்டை விற்பனை செய்துள்ளார்.
இது குறித்து அறிந்த பழனியப்பன் திருப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில், வீட்டை விலைக்கு வாங்கிய சிதம்பரம் 50-க்கும் மேற்பட்டோருடன் பழனியப்பன் குடியிருந்த வீட்டில் அத்துமீறி நுழைந்துப் பொருட்களை சாலையில் வீசி எரிந்துள்ளனர். இது தொடர்பாக, சரோஜினி ஊரக காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.