சசிகுமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் நிலையை காவல்துறை உடனடியாக தெரிவ�

கோவையில் இந்து முன்னனி பிரமுகர் சசிகுமார் கடந்த மாதம் 22.9.2016 அன்று மர்மநபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து நடைபெற்ற வன்முறை சம்பவங்களால் கோவையில் காவல்துறையினர் பலரை சந்தேகத்தின் பேரில் கைது  செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களின் நிலையை காவல்துறை உடனடியாக தெரிவிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

 கோவையில் கடந்த 22ம் தேதி இந்து முன்னனி பிரமுகர் ச்சிகுமார் படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவரது இறுதி ஊர்வலத்தின்போது பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன.அதில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்து சிறையிலடைத்துள்ளனர்.இந்த சூழலில் கைது செய்யப்பட்டவர்களின் பெற்றோரை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் துடியலூர் பகுதியில் சந்தித்தார்.பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,வன்முறை சம்பவம் தொடர்பாக தற்போது காவல்துறையினர் அப்பாவிகளை கைது செய்துள்ளதாகவும் கைது செய்யப்பட்டதில் சில விஷயங்கள் உள்ளே இருப்பதாகவும் குற்றம் சாட்டியதுடன் அவர்களை எங்கு வைத்துள்ளனர் என்பது குறித்த பட்டியல் மற்றும் விவரங்களை உடனடியாக வெளியிட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். கொலையாளிகளை கைது செய்ய வேண்டியது காவல்துறையினரின் கட்டாய கடமை எனவும் உண்மையான குற்றவாளிகளை கைது செய்வதில் யாருடைய தலையிடும் இருக்க கூடாது எனவும் கூறினார். இதேபோல் சிபிசிஐடி காவல்துறையினர் இவ்வழக்கை விரைந்து முடிக்க வேண்டுமெனவும் ஏற்கனவே இதுபோன்ற வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும் இவ்வழக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரித்தால் நன்றாக இருக்கும் எனவும் பொன் ராதாகிருஷ்ணன் சுட்டிக்காட்டினார்.

முன்னதாக வன்முறை சம்பவம் தொடரபாக கைது செய்யப்பட்டவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கைது செய்யப்பட்டவர்களை மீட்டு தர கோரி கண்ணீருடன் அமைச்சரிடம் மனு அளித்தனர்.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...