பொள்ளாச்சியில் பழங்குடியின பெண்ணை ஏமாற்றி குழந்தை கடத்தல் : குழந்தை கும்பல் பெண்ணை பிடிக்க தனிப்படை அமைப்பு

கோவை : பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பழங்குடி தம்பதியை ஏமாற்றி குழந்தையை கடத்திச் சென்ற கடத்தல்கார பெண்ணை கைது செய்ய போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

கோவை : பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பழங்குடி தம்பதியை ஏமாற்றி குழந்தையை கடத்திச் சென்ற கடத்தல்கார பெண்ணை கைது செய்ய போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள காளியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பாலன் மற்றும் தேவி தம்பதியினர். பழங்குடி மக்களான இவர்களுக்கு ஏற்கெனவே இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், மூன்றாவது பிரசவத்துக்காக ஏப்ரல் 29-ம் தேதி மாலை பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அன்று இரவே இந்த தேவிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இப்படியிருக்க இவர்களுக்கு அறிமுகம் இல்லாத பெண் ஒருவர் இவர்களிடம் வந்து, என் கணவரை சிகிச்சைக்காக இதே மருத்துவமனையில் தான் அனுமதித்துள்ளதாகவும், ஆனால், அங்கு ஆண்கள் மட்டுமே தங்க முடியும். எனவே, நான் இங்கு தங்கியிருந்து குழந்தையையும் பார்த்துக்கொள்கிறேன் என்றுள்ளார். 

இதற்கு தேவியின் குடிம்பத்தினர் ஒப்புக்கொண்டுள்ளார். பின்னர் இன்று டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு புறப்படும்போது, அந்தப் பெண் குழந்தைக்கு காதில் கொப்புளம் உள்ளது. காது டாக்டரிடம் காட்ட வேண்டும் என்றுள்ளார். இதையடுத்து, அந்தப் பெண்ணும், பாலனும் குழந்தையை காட்ட காது டாக்டரிடம் சென்றுள்ளனர். அங்கு சென்ற பிறகு குழந்தைக்கு சொட்டு மருந்து வாங்கி வர குழந்தையின் தந்தை பாலனை அனுப்பியுள்ளார். பின்னர், அவர் சென்ற நேரத்தில் அந்தப் பெண் குழந்தையை கடத்தி சென்றுவிட்டார். 

இதனால், அதிர்ச்சியடைந்த தேவி மற்றும் அவரது குடும்பத்தினர் இதுகுறித்து, பொள்ளாச்சி கிழக்கு காவல்நிலைய போலீசில் புகார் அளித்தனர். பின்னர், இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், குழந்தை கடத்தலில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...