நீலகிரி : பந்தலூர் அருகே கோடை வெப்பத்தின் காரணமாக தேயிலையில் சிவப்பு சிலந்தி தாக்குதல் அதிகரித்துள்ளது.
நீலகிரி : பந்தலூர் அருகே கோடை வெப்பத்தின் காரணமாக தேயிலையில் சிவப்பு சிலந்தி தாக்குதல் அதிகரித்துள்ளது.
நீலகிரி மாவட்டம், பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தனியார் தேயிலை தோட்டங்களில் பசுந்தேயிலை வரத்தை அதிகரிக்க உரமிடுதல், மருந்து தெளித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், டான்டீ நிறுவனம் இதுபோன்ற பணிகளை மேற்கொள்ளாத நிலையில், இலைகளுக்கு பூஞ்சான நோய்கள் பரவியும், தேயிலை வரத்து குறைந்தும் காணப்படுகிறது.
தற்போது, கோடை வெப்பத்தால் தேயிலை செடிகளில் சிவப்பு சிலந்தி நோய் பரவி வருகிறது. இதனால், தேயிலை செடிகள், சிவப்பு நிறத்துக்கு மாறியுள்ளதுடன், இலை வரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, பந்தலூர் பகுதியில் பரவும் சிவப்பு சிலந்தி நோயை கட்டுப்படுத்த, தேயிலை வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.
நீலகிரி மாவட்டம், பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தனியார் தேயிலை தோட்டங்களில் பசுந்தேயிலை வரத்தை அதிகரிக்க உரமிடுதல், மருந்து தெளித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், டான்டீ நிறுவனம் இதுபோன்ற பணிகளை மேற்கொள்ளாத நிலையில், இலைகளுக்கு பூஞ்சான நோய்கள் பரவியும், தேயிலை வரத்து குறைந்தும் காணப்படுகிறது.
தற்போது, கோடை வெப்பத்தால் தேயிலை செடிகளில் சிவப்பு சிலந்தி நோய் பரவி வருகிறது. இதனால், தேயிலை செடிகள், சிவப்பு நிறத்துக்கு மாறியுள்ளதுடன், இலை வரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, பந்தலூர் பகுதியில் பரவும் சிவப்பு சிலந்தி நோயை கட்டுப்படுத்த, தேயிலை வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.