கோவை : மேட்டுப்பாளையம் அருகே காட்டுயானை புகுந்து கரும்பு , வாழை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கோவை : மேட்டுப்பாளையம் அருகே காட்டுயானை புகுந்து கரும்பு , வாழை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடை அடுத்த தோலம்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் காட்டுயானை கூட்டம் ஒன்று விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. அங்குள்ள மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் உள்ள யானை உள்ளிட்ட வன விலங்குகள் வறட்சி காரணமாக உணவு, தண்ணீர் தேடி அருகில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. கடந்த சில வாரங்களாக அவ்வப்போது விளைநிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தி வரும் இந்த யானை கூட்டம், இன்று அதிகாலை மணல் புதூர் மற்றும் தோலம்பாளையம், மேல்பாவி உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து ஒரே இரவில் புகுந்து ஒரு ஏக்கர் அளவிலான கரும்பு பயிரினையும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்களையும் சாய்த்து சேதப்படுத்தியது.

இதனால், சுமார் 50 ஆயிரத்திற்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறும் விவசாயிகள், வறட்சி காலம் என்பதால் தொடர்ந்து வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. எனவே, வனத்துறை மீண்டும் வனவிலங்குள் நுழையாதவாறு உரிய நடவடிக்கை எடுப்பதுடன் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் வலியுறுத்தியுள்ளனர்.