கோவை : காங்கிரஸ் மாநில தலைவர் வரவேற்பிற்கு வி.எம்.சி. மனோகரன் தரப்பினருக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், கோவை விமான நிலையத்தில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் பரபரப்பு நிலவியது.
கோவை : காங்கிரஸ் மாநில தலைவர் வரவேற்பிற்கு வி.எம்.சி. மனோகரன் தரப்பினருக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், கோவை விமான நிலையத்தில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் பரபரப்பு நிலவியது.
காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். இவருக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. மேலும், மாநிலத் தலைவர் அழகிரியை வரவேற்க மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமாரும், கோவை மாவட்ட தலைவர் வி.எம்.சி. மனோகரனும் வந்திருந்தனர். ஆனால், வரவேற்பு பகுதிக்குள் மயூரா ஜெயக்குமார் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால், மாவட்டத்தலைவர் மனோகரனும், பொறுப்பாளர் சரவணனும் அனுமதிக்கப்படவில்லை. இதனால், மனோகரன் ஆதரவாளர்கள் மயூரா ஜெயக்குமாருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதனால், இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்படும் சூழல் உருவானது. இதனால், விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.