திருப்பூர் : திருப்பூரில் கட்டிட மேஸ்திரி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் : திருப்பூரில் கட்டிட மேஸ்திரி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடியைச் சேர்ந்த ஆரோக்கியசாமி என்பவர் திருப்பூர் அங்கேரிபாளையம் பகுதியில் குடியிருந்து கட்டிட மேஸ்திரி வேலை செய்து வருகிறார். இவர், தினந்தோறும் பி.என். சாலையில் உள்ள மாநகராட்சி பூங்கா அருகில் இருந்து கட்டிட வேலைக்கு ஆட்களை அழைத்து செல்வது வழக்கம். இந்த நிலையில், ஆட்களை அழைத்து செல்வதில் இவருக்கும், மற்றொரு தரப்பினருக்கு சில நாட்களாக பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இன்று காலை வழக்கம்போல, ஆட்களை அழைத்துச்செல்ல வந்த ஆரோக்கியசாமியை இடைமறித்த 4 பேர் கொண்ட கும்பல், மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆரோக்கியசாமியின் வயிறு மற்றும் கழுத்துப்பகுதியில் குத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

கத்தியால் குத்தியதில் நிலைதடுமாறி விழுந்த ஆரோக்கியசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் அறிந்து வந்த காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அங்கிருந்த கட்டிட தொழிலாளர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலையில் நடைபெற்ற இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடியைச் சேர்ந்த ஆரோக்கியசாமி என்பவர் திருப்பூர் அங்கேரிபாளையம் பகுதியில் குடியிருந்து கட்டிட மேஸ்திரி வேலை செய்து வருகிறார். இவர், தினந்தோறும் பி.என். சாலையில் உள்ள மாநகராட்சி பூங்கா அருகில் இருந்து கட்டிட வேலைக்கு ஆட்களை அழைத்து செல்வது வழக்கம். இந்த நிலையில், ஆட்களை அழைத்து செல்வதில் இவருக்கும், மற்றொரு தரப்பினருக்கு சில நாட்களாக பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இன்று காலை வழக்கம்போல, ஆட்களை அழைத்துச்செல்ல வந்த ஆரோக்கியசாமியை இடைமறித்த 4 பேர் கொண்ட கும்பல், மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆரோக்கியசாமியின் வயிறு மற்றும் கழுத்துப்பகுதியில் குத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

கத்தியால் குத்தியதில் நிலைதடுமாறி விழுந்த ஆரோக்கியசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் அறிந்து வந்த காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அங்கிருந்த கட்டிட தொழிலாளர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலையில் நடைபெற்ற இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.