நீலகிரி : உதகை அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவ, மாணவிகள் 20 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்து தங்களது மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்ட சம்பவம் அனைவரது மனதிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
நீலகிரி : உதகை அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவ, மாணவிகள் 20 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்து தங்களது மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்ட சம்பவம் அனைவரது மனதிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

நீலகிரி மாவட்டம் உதகையை அடுத்த கக்குச்சி கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் அக்கிராமம் மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் பள்ளி படிப்பை முடித்து பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த 1998-ம் ஆண்டு இப்பள்ளியில் பயின்ற மாணவ, மாணவிகள் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு உதகை அரசு தாவரவியல் பூங்காவில் சந்தித்துக் கொண்டனர். அப்போது, அனைவரும் ஒன்றிணைந்து கேக் வெட்டி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். இவர்கள் அனைவரும் கோவை, ஒசூர், கரூர், மதுரை மற்றும் வெளி நாடுகளிலும் நல்ல பணிகளில் இருந்து வருகின்றனர். இவர்கள் தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டதுடன் நடனமாடி மகிழ்ந்தனர்.

இனி ஒவ்வொரு ஆண்டும் மே மாத்தில் ஒன்றிணைந்து ஆதரவற்ற அனாதை இல்லங்களில் ஒருநாள் சேவை செய்வதென உறுதி எடுத்துக் கொண்டனர்.

நீலகிரி மாவட்டம் உதகையை அடுத்த கக்குச்சி கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் அக்கிராமம் மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் பள்ளி படிப்பை முடித்து பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த 1998-ம் ஆண்டு இப்பள்ளியில் பயின்ற மாணவ, மாணவிகள் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு உதகை அரசு தாவரவியல் பூங்காவில் சந்தித்துக் கொண்டனர். அப்போது, அனைவரும் ஒன்றிணைந்து கேக் வெட்டி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். இவர்கள் அனைவரும் கோவை, ஒசூர், கரூர், மதுரை மற்றும் வெளி நாடுகளிலும் நல்ல பணிகளில் இருந்து வருகின்றனர். இவர்கள் தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டதுடன் நடனமாடி மகிழ்ந்தனர்.

இனி ஒவ்வொரு ஆண்டும் மே மாத்தில் ஒன்றிணைந்து ஆதரவற்ற அனாதை இல்லங்களில் ஒருநாள் சேவை செய்வதென உறுதி எடுத்துக் கொண்டனர்.