நீலகிரி : ஹைட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தக்கூடாது என மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவர் யுவராஜ் தெரிவித்துள்ளார்.
நீலகிரி : ஹைட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தக்கூடாது என மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவர் யுவராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின், மாநில இளைஞர் அணி தலைவர் யுவராஜ் இன்று உதகையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- தேர்தல் முடிவுகள் எங்களுக்கு பெரும் வெற்றியை தரும். தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி மதவாதத்திற்கு அப்பாற்பட்ட கூட்டணி வெற்றி பெறும். தற்போது, நடைபெற உள்ள தொகுதி தேர்தல்களிலும் சேர்த்து 40-க்கு 40-ம் வெற்றி பெறும். தி.மு.க. கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஆளும் கட்சியைக் கவிழ்க்கும் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. தற்போது, சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானமும் தோல்வியில் முடியும்.
நீட் தேர்வை பொறுத்தவரையில் இந்தாண்டு இறுதி தேர்வாக இருக்க வேண்டும். அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வு இருக்கக் கூடாது. இதேபோல், தமிழக அரசு கேபிள் கட்டணத்தை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசுக்கு 3 கோரிக்கைகளாக தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன் திட்டம் போன்ற திட்டங்களை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தக் கூடாது. தமிழகத்தில் சுங்கவரி சோதனை சாவடிகளில் பல மடங்கு கட்டண உயர்வைக் கண்டித்து அடுத்த மாதம் முதல் வாரத்தில் 32 சுங்கவரி சோதனை சாவடிகளிலும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெறும் .
இலங்கையில் கடந்த ஈஸ்டர் பண்டிகையின் தேவாலயங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் பல உயிர்கள் பலியாகியுள்ள நிலையில், அங்கு வாழும் தமிழ் மக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்ற கோரிக்கைகளை முன் வைத்தார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின், மாநில இளைஞர் அணி தலைவர் யுவராஜ் இன்று உதகையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- தேர்தல் முடிவுகள் எங்களுக்கு பெரும் வெற்றியை தரும். தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி மதவாதத்திற்கு அப்பாற்பட்ட கூட்டணி வெற்றி பெறும். தற்போது, நடைபெற உள்ள தொகுதி தேர்தல்களிலும் சேர்த்து 40-க்கு 40-ம் வெற்றி பெறும். தி.மு.க. கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஆளும் கட்சியைக் கவிழ்க்கும் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. தற்போது, சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானமும் தோல்வியில் முடியும்.
நீட் தேர்வை பொறுத்தவரையில் இந்தாண்டு இறுதி தேர்வாக இருக்க வேண்டும். அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வு இருக்கக் கூடாது. இதேபோல், தமிழக அரசு கேபிள் கட்டணத்தை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசுக்கு 3 கோரிக்கைகளாக தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன் திட்டம் போன்ற திட்டங்களை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தக் கூடாது. தமிழகத்தில் சுங்கவரி சோதனை சாவடிகளில் பல மடங்கு கட்டண உயர்வைக் கண்டித்து அடுத்த மாதம் முதல் வாரத்தில் 32 சுங்கவரி சோதனை சாவடிகளிலும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெறும் .
இலங்கையில் கடந்த ஈஸ்டர் பண்டிகையின் தேவாலயங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் பல உயிர்கள் பலியாகியுள்ள நிலையில், அங்கு வாழும் தமிழ் மக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்ற கோரிக்கைகளை முன் வைத்தார்.