மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தக் கூடாது என மத்திய அரசிடம் வலியுறுத்தல் : தமிழ் மாநில காங்கிரசின் யுவராஜ் பேட்டி

நீலகிரி : ஹைட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தக்கூடாது என மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவர் யுவராஜ் தெரிவித்துள்ளார்.

நீலகிரி : ஹைட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தக்கூடாது என மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவர் யுவராஜ் தெரிவித்துள்ளார்.



தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின், மாநில இளைஞர் அணி தலைவர் யுவராஜ் இன்று உதகையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- தேர்தல் முடிவுகள் எங்களுக்கு பெரும் வெற்றியை தரும். தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி மதவாதத்திற்கு அப்பாற்பட்ட கூட்டணி வெற்றி பெறும். தற்போது, நடைபெற உள்ள தொகுதி தேர்தல்களிலும் சேர்த்து 40-க்கு 40-ம் வெற்றி பெறும். தி.மு.க. கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஆளும் கட்சியைக் கவிழ்க்கும் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. தற்போது, சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானமும் தோல்வியில் முடியும். 

நீட் தேர்வை பொறுத்தவரையில் இந்தாண்டு இறுதி தேர்வாக இருக்க வேண்டும். அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வு இருக்கக் கூடாது. இதேபோல், தமிழக அரசு கேபிள் கட்டணத்தை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசுக்கு 3 கோரிக்கைகளாக தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன் திட்டம் போன்ற திட்டங்களை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தக் கூடாது. தமிழகத்தில் சுங்கவரி சோதனை சாவடிகளில் பல மடங்கு கட்டண உயர்வைக் கண்டித்து அடுத்த மாதம் முதல் வாரத்தில் 32 சுங்கவரி சோதனை சாவடிகளிலும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெறும் . 

இலங்கையில் கடந்த ஈஸ்டர் பண்டிகையின் தேவாலயங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் பல உயிர்கள் பலியாகியுள்ள நிலையில், அங்கு வாழும் தமிழ் மக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்ற கோரிக்கைகளை முன் வைத்தார்.

Newsletter

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...