கோவை : அருந்ததியின மக்களுக்கு 3 சதவீதம் இட ஒதுக்கீடு அளித்தவர் கலைஞர் கருணாநிதி என்று சூலூரில் அருந்ததி இன மக்கள் குடியிருப்பில் பிரச்சாரம் செய்த தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி தெரிவித்தார்.
கோவை : அருந்ததியின மக்களுக்கு 3 சதவீதம் இட ஒதுக்கீடு அளித்தவர் கலைஞர் கருணாநிதி என்று சூலூரில் அருந்ததி இன மக்கள் குடியிருப்பில் பிரச்சாரம் செய்த தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி தெரிவித்தார்.
சூலூர் சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமியை ஆதரித்து தி.மு.க.வினர் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சூலூர் ஸ்லிப்பர் காலனியில் வசிக்கும் துப்புரவு தொழிலாளர்கள் மத்தியில் தி.மு.க.வின் கழக துணைப்பொதுச் செயலாளர் வி.பி.துரைசாமி அருந்ததியின மக்களிடத்தில் சென்ற வாக்குகளை சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது :- ஏழைகளின் கடனை தள்ளுபடி செய்தவர் கலைஞர். அனைத்து சலுகைகளும் பெற்று தந்தவர் கலைஞர். அருந்ததியினத்தின் இந்த மக்கள் வழக்கறிஞர்களாக, டாக்டர்களாக, பொறியாளர்களாக வர வேண்டும் என 3 சதவீதம் இட ஒதுக்கீடு அளித்தவர் கலைஞர். தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் கேபிள் கட்டணம் குறைக்கப்பட உள்ளது. 5 சவரன் வரை நகை கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவி குழு கடனை கட்ட வேண்டாம். கடனை கட்டப்போகின்ற சின்னம் உதய சூரியன். 10-வது படித்த 50 ஆயிரம் பெண்களுக்கு மக்கள் நல பணியாளர்கள் பணி வழங்க உள்ளார் தி.மு.க. தலைவர். 10-வது படித்த அருந்ததியின ஆண்களுக்கு சாலை பணியாளர் பணி வழங்கப்படும் என ஏராளமான திட்டங்களை தி.மு.க. தலைவர் அறிவித்துள்ளார்கள். கேட்காமலேயே இலவச அடுப்பு கேஸ் சிலிண்டர் வழங்கியவர் கலைஞர்.
இன்று ஒரு சிலிண்டரின் விலையை எடப்பாடியும், மோடியும் 1,300 ரூபாயாக உயர்த்தி விட்டனர். தி.மு.க. ஆட்சி வந்தவுடன் அதை பழைய விலைக்கே கொண்டு வரப்பட உள்ளது. இந்த திட்டங்கள் அனைத்தும் உங்களை தேடி வர வேண்டும். அதற்கு அருந்ததியின சமுதாய மக்கள் உதயசூரியனுக்கு வாக்களித்து, 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பொங்கலூர் பழனிச்சாமி ஜெயிக்க வேண்டும், என்று பேசினார்.

தொடர்ந்து கண்ணம்பாளையம் பேரூராட்சி, பீடம்பள்ளி பேரூராட்சி பகுதியில் உள்ள அருந்ததியின மக்களிடத்தில் வாக்குகளை சேகரித்தார். தொடர்ந்து அருந்ததியின மக்களிடத்தில் நடந்து சென்று வாக்குகளை சேகரித்தார். இந்த பிரச்சாரத்தின்போது, சூலூர் நகர செயலாளர் ஜெகநாதன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சபரி கார்த்திகேயன் உள்ளிட்ட ஏராளமானோர் உடனிருந்தனர்.
சூலூர் சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமியை ஆதரித்து தி.மு.க.வினர் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சூலூர் ஸ்லிப்பர் காலனியில் வசிக்கும் துப்புரவு தொழிலாளர்கள் மத்தியில் தி.மு.க.வின் கழக துணைப்பொதுச் செயலாளர் வி.பி.துரைசாமி அருந்ததியின மக்களிடத்தில் சென்ற வாக்குகளை சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது :- ஏழைகளின் கடனை தள்ளுபடி செய்தவர் கலைஞர். அனைத்து சலுகைகளும் பெற்று தந்தவர் கலைஞர். அருந்ததியினத்தின் இந்த மக்கள் வழக்கறிஞர்களாக, டாக்டர்களாக, பொறியாளர்களாக வர வேண்டும் என 3 சதவீதம் இட ஒதுக்கீடு அளித்தவர் கலைஞர். தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் கேபிள் கட்டணம் குறைக்கப்பட உள்ளது. 5 சவரன் வரை நகை கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவி குழு கடனை கட்ட வேண்டாம். கடனை கட்டப்போகின்ற சின்னம் உதய சூரியன். 10-வது படித்த 50 ஆயிரம் பெண்களுக்கு மக்கள் நல பணியாளர்கள் பணி வழங்க உள்ளார் தி.மு.க. தலைவர். 10-வது படித்த அருந்ததியின ஆண்களுக்கு சாலை பணியாளர் பணி வழங்கப்படும் என ஏராளமான திட்டங்களை தி.மு.க. தலைவர் அறிவித்துள்ளார்கள். கேட்காமலேயே இலவச அடுப்பு கேஸ் சிலிண்டர் வழங்கியவர் கலைஞர்.
இன்று ஒரு சிலிண்டரின் விலையை எடப்பாடியும், மோடியும் 1,300 ரூபாயாக உயர்த்தி விட்டனர். தி.மு.க. ஆட்சி வந்தவுடன் அதை பழைய விலைக்கே கொண்டு வரப்பட உள்ளது. இந்த திட்டங்கள் அனைத்தும் உங்களை தேடி வர வேண்டும். அதற்கு அருந்ததியின சமுதாய மக்கள் உதயசூரியனுக்கு வாக்களித்து, 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பொங்கலூர் பழனிச்சாமி ஜெயிக்க வேண்டும், என்று பேசினார்.

தொடர்ந்து கண்ணம்பாளையம் பேரூராட்சி, பீடம்பள்ளி பேரூராட்சி பகுதியில் உள்ள அருந்ததியின மக்களிடத்தில் வாக்குகளை சேகரித்தார். தொடர்ந்து அருந்ததியின மக்களிடத்தில் நடந்து சென்று வாக்குகளை சேகரித்தார். இந்த பிரச்சாரத்தின்போது, சூலூர் நகர செயலாளர் ஜெகநாதன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சபரி கார்த்திகேயன் உள்ளிட்ட ஏராளமானோர் உடனிருந்தனர்.