எழுத்தாளர் வண்ணநிலவனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிப்பு

எழுத்தாளர் வண்ணநிலவனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை கொடிசியா புத்தகத் திருவிழா அமைப்பு அறிவித்துள்ளது.

எழுத்தாளர் வண்ணநிலவனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை கொடிசியா புத்தகத் திருவிழா அமைப்பு அறிவித்துள்ளது. 

இதுகுறித்து கொடிசியா புத்தகத் திருவிழா அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கமான கொடிசியா சார்பில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர்கள் சங்கத்தின் ஆதரவுடன் வரும் ஜூலை 19-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் "கோவை புத்தகத் திருவிழா' நடத்தப்படுகிறது. புத்தகத் திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் மூத்த படைப்பாளிகளுக்கு "வாழ்நாள் சாதனையாளர்' விருது வழங்கப்பட்டு வருகிறது. 

இந்த ஆண்டுக்கான "வாழ்நாள் சாதனையாளர்' விருது எழுத்தாளர் வண்ணநிலவனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுடன் ரூ. 1 லட்சம் வழங்கப்பட இருக்கிறது. 

மேலும், இந்த ஆண்டு முதல் இளம் இலக்கிய எழுத்தாளர்களுக்கான விருதுகளும் வழங்கப்பட உள்ளன. புனைவு, கட்டுரை, கவிதை ஆகிய மூன்று பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளன. இந்த விருது தலா ரூ. 25 ஆயிரம் ரொக்கம், விருதுச் சான்றிதழ் அடங்கியது. அதன்படி, புனைவு நூல்களுக்கான பிரிவில் "கற்றாழைப் பச்சை' நூலுக்காக குணா கந்தசாமிக்கும், அபுனைவு நூல்களுக்கான பிரிவில் "தமிழ் இலக்கிய வரலாறு நூலுக்காக ஞா.குருசாமிக்கும், கவிதை நூல்களுக்கான பிரிவில் "விரல்களில் வழியும் விரலற்றவனின் செங்குருதி' கவிதைத் தொகுப்புக்காக சோலை மாயவன் ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்பட உள்ளன.

புத்தகத் திருவிழாவின் தொடக்க தினமான ஜூலை 19 ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் எழுத்தாளர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளது. 

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...