நீலகிரி : கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில், உதகையில் இருந்து கேத்தி வரை இயக்கப்படும் உதகை மலை ரயில், இன்று முதல் தினமும் 3 முறை இயக்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது.
நீலகிரி : கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில், உதகையில் இருந்து கேத்தி வரை இயக்கப்படும் உதகை மலை ரயில், இன்று முதல் தினமும் 3 முறை இயக்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது.
உதகையில் தற்போது கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சுற்றுலா மையங்களுக்குச் சென்று பார்வையிடுவது ஒருபுறம் என்றால், மலை ரயிலில் பயணிப்பது என்பது அவர்களின் பயணத் திட்டத்தில் முக்கியமான ஒன்றாக இடம்பெறுகிறது. இதற்காக ரயில்வே துறை பல்வேறு மேம்பாடுகளை செய்து வருகின்றது.
அந்த வகையில், இதுவரை வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் உதகை முதல் கேத்தி இடையே இயக்கப்பட்டு வந்த சுற்றுலா சிறப்பு ரயில் இன்று முதல் தினந்தோறும் மூன்று முறை இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, உதகை - கேத்தி வரை காலை 9.40 மணிக்கும், 11.30 மணிக்கும், பிற்பகல் 3.00 மணிக்கும் என மூன்று முறை இயக்கப்படுகிறது கட்டணம் முதல் வகுப்பு ரூ. 400, இரண்டாம் வகுப்பு ரூ. 300 ஆகும். பயணிகள் அனைவருக்கும் தேயிலை தூள், நீலகிரி தைலம் போன்றவை கூடுதலாக வழங்கப்படுகிறது. இதன்மூலம், மலை ரயிலில் அனைத்து சுற்றுலாப் பயணிகளும் செல்லும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
உதகையில் தற்போது கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சுற்றுலா மையங்களுக்குச் சென்று பார்வையிடுவது ஒருபுறம் என்றால், மலை ரயிலில் பயணிப்பது என்பது அவர்களின் பயணத் திட்டத்தில் முக்கியமான ஒன்றாக இடம்பெறுகிறது. இதற்காக ரயில்வே துறை பல்வேறு மேம்பாடுகளை செய்து வருகின்றது.
அந்த வகையில், இதுவரை வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் உதகை முதல் கேத்தி இடையே இயக்கப்பட்டு வந்த சுற்றுலா சிறப்பு ரயில் இன்று முதல் தினந்தோறும் மூன்று முறை இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, உதகை - கேத்தி வரை காலை 9.40 மணிக்கும், 11.30 மணிக்கும், பிற்பகல் 3.00 மணிக்கும் என மூன்று முறை இயக்கப்படுகிறது கட்டணம் முதல் வகுப்பு ரூ. 400, இரண்டாம் வகுப்பு ரூ. 300 ஆகும். பயணிகள் அனைவருக்கும் தேயிலை தூள், நீலகிரி தைலம் போன்றவை கூடுதலாக வழங்கப்படுகிறது. இதன்மூலம், மலை ரயிலில் அனைத்து சுற்றுலாப் பயணிகளும் செல்லும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.