கோவை : சூலூர் இடைத்தேர்தலுக்கான அ.தி.மு.க. வேட்பாளர் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நம்பிக்கை தெரிவித்தார்.
கோவை : சூலூர் இடைத்தேர்தலுக்கான அ.தி.மு.க. வேட்பாளர் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நம்பிக்கை தெரிவித்தார்.

கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கந்தசாமி இன்று ஊர்வலமாக வந்து வேட்புமனுவை தேர்தல் அதிகாரி பாலகிருஷ்ணனிடம் தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலின் போது, அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
வேட்புமனு தாக்கலுக்குப் பின் சூலூர் அ.தி.மு.க. வேட்பாளர் கந்தசாமி செய்தியாளர்களுக்கு பேட்டிளித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- முதலமைச்சர், துணை முதலமைச்சர் கொண்டு வந்த அத்தனை திட்டங்களையும் நிறைவேற்றுவேன். பொதுமக்களில் ஒருவனாக இருந்து தேவைகளை பூர்த்தி செய்வேன். மேலும், சுல்தான்பேட்டை, சூலூரில் என இரு இடங்களிலும் வீடு இருக்கின்றது. எனவே, இங்கிருந்தே மக்கள் பணி ஆற்றுவேன். அடித்தட்டு மக்களுக்கும், விவசாயிகளுக்கும் தேவையானதை செய்வேன். சூலூர் தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம், எனக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, சீட் வழங்கப்படாததால் முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமி அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகின்றதே என கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்குப் பதில் அளித்த அமைச்சர் எஸ்.பி வேலுமணி, "அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். ஒன்றிணைந்து செயல்படுவோம். 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவோம்," என அவர் தெரிவித்தார்.