பொய் வழக்கை ரத்து செய்யக் கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியினர் மனு

திருப்பூர் : தேர்தலின் போது மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியினர் மீது பொய்யாக பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சுமார் 50-க்கும் மேற்பட்டோர் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

திருப்பூர் : தேர்தலின் போது மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியினர் மீது பொய்யாக பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சுமார் 50-க்கும் மேற்பட்டோர் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 



அவர்கள் அளித்து மனுவில் கூறியிருப்பதாவது :- திருப்பூர் மாவட்டம் 33-வது வார்டு பகுதிக்குட்பட்டது மண்ணரை பாரப்பாளையம் பகுதி. இந்தப் பகுதியில் நாடாளுமன்ற தேர்தல் நடந்த சமயத்தில், அ.தி.மு.க. கட்சியைச் சேர்ந்த கிளை நிர்வாகியான கருப்பசாமி என்பவர் தேர்தல் நடந்த அன்று வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக ஆதாரத்துடன், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நிர்வாகிகள் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால், அந்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் காவல்துறையினர் எடுக்கவில்லை.

மாறாக, அ.தி.மு.க. நிர்வாகி கருப்பசாமி என்பவர் பொய்யாக அரசு மருத்துவமனையில் சேர்ந்துவிட்டு, எதிர்கட்சியினர் தன்னை தாக்கியதாகக் கொடுத்த புகாரின் அடிப்படையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்த 5 பேர் மீது திருப்பூர் வடக்கு காவல்துறையினர் எந்த விசாரணை மேற்கொள்ளாமல் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த வழக்கை உடனடியாக ரத்து செய்து, கருப்பசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...