சூலூர் இடைத்தேர்தல் : மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஜி. மயில்சாமி இன்று வேட்புமனு தாக்கல்

கோவை : சூலூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் ஜி. மயில்சாமி இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.


கோவை : சூலூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் ஜி. மயில்சாமி இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். 



மே 19-ம் தேதி நடைபெறும் சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 22-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சூலூர் தொகுதியில் போட்டியிடும் ஜி. மயில்சாமி இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். 

65-வது வயதான மயில்சாமி சூலூரைச் சேர்ந்த இயற்கை விவசாயி ஆவார். விவசாயத்திற்கு தேவையான இயற்கை உரங்களை இவரே தயாரித்து வருகிறார். மேலும், பல்வேறு தொண்டு நிறுவனங்களின் மூலம் பல்வேறு சமூக பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக, உழவர் உழைப்பாளர் விவசாய சங்கத்தின் பொருளாளராகவும் இருந்துள்ளார். 



"நான் இயற்கை விவசாயத்தின் ஆர்வலராக இருப்பதால், சூலூரில் இயற்கை விவசாயத்தை மேல்நோக்கி எடுத்துவர கடுமையாகப் போராடுவேன்," என்கிறார் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஜி. மயில்சாமி.

மேலும், சுத்தமான, சீரான குடிநீர் விநியோகம், சூலூர் தொகுதிக்குட்பட்ட நீர்நிலைகளை மறுசீரமைப்பது, பாதுகாப்பது மற்றும் சூலூர் தொகுதியில் பசுமையான சுற்றுச்சூழலை உருவாக்குவது போன்ற திட்டங்களை கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...