கோவை : சூலூர், அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிட உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர்.
கோவை : சூலூர், அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிட உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கடந்த 18ஆம் தேதி 38 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. மீதமுள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22ஆம் தேதி தொடங்கியது. நாளையுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு பெறுகிறது.
இந்த நிலையில், நடிகர் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, திருப்பரங்குன்றம் தொகுதியில் சக்திவேல், சூலூர் தொகுதியில் ஜி. மயில்சாமி, அரவக்குறிச்சி தொகுதியில் எஸ். மோகன்ராஜ், ஒட்டப்பிடாரம் தொகுதியில் கூட்டணி கட்சியான வளரும் தமிழகம் கட்சியின் சார்பில் எம். காந்தி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
