கோவை: கோவை மாவட்டம் சூவூர் பகுதியில் அதிமுக வேட்பாளர் அறிமுகக்கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
கோவை: கோவை மாவட்டம் சூவூர் பகுதியில் அதிமுக வேட்பாளர் அறிமுகக்கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், மா.பா.பாண்டியராஜன், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன், தேமுதிக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பனப்பட்டி தினகரன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், “சட்டமன்ற உறுப்பினராக எப்படி இருக்க வேண்டுமென்பதற்கு உதாரணமாக மறைந்த சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் செயல்பட்டார். கனகராஜ் குடும்பத்தை சேர்ந்த கந்தசாமி சூலூரில் போட்டியிடுகிறார். சூலூரில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெறும். திமுக தலைவர் உதவாக்கரை தலைவர், மக்களுக்கு பயன்படாத தலைவர் ஸ்டாலின். முதலமைச்சர் கனவில் உள்ள ஸ்டாலின் உயிரோடு இருக்கும் வரை ஸ்டாலின் முதலமைச்சர் நாற்காலியில் அமர முடியாது. ஸ்டாலினின் கொள்ளு பேரன் வந்தாலும் முதலமைச்சர் நாற்காலியில் அமர முடியாது. இடைத்தேர்தலில் 22 தொகுதியிலும் அதிமுக அமோக வெற்றி பெறும். இந்த தேர்தல் களம் திமுகவிற்கு மரண களமாக அமையும்” என தெரிவித்தார்.
அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், மா.பா.பாண்டியராஜன், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன், தேமுதிக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பனப்பட்டி தினகரன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், “சட்டமன்ற உறுப்பினராக எப்படி இருக்க வேண்டுமென்பதற்கு உதாரணமாக மறைந்த சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் செயல்பட்டார். கனகராஜ் குடும்பத்தை சேர்ந்த கந்தசாமி சூலூரில் போட்டியிடுகிறார். சூலூரில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெறும். திமுக தலைவர் உதவாக்கரை தலைவர், மக்களுக்கு பயன்படாத தலைவர் ஸ்டாலின். முதலமைச்சர் கனவில் உள்ள ஸ்டாலின் உயிரோடு இருக்கும் வரை ஸ்டாலின் முதலமைச்சர் நாற்காலியில் அமர முடியாது. ஸ்டாலினின் கொள்ளு பேரன் வந்தாலும் முதலமைச்சர் நாற்காலியில் அமர முடியாது. இடைத்தேர்தலில் 22 தொகுதியிலும் அதிமுக அமோக வெற்றி பெறும். இந்த தேர்தல் களம் திமுகவிற்கு மரண களமாக அமையும்” என தெரிவித்தார்.