கோத்தகிரியில் அதிக பாரத்துடன் சென்ற லாரி வாகனங்கள் மீது மோதி விபத்து : உரிய இழப்பீடு பெற்றுத்தரக் கோரி போலீசில் புகார்

நீலகிரி : கோத்தகிரி அருகே சரக்கு லாரி ஒன்று பாரம் தாங்காமல் பின்னோக்கி வந்து மோதியதில், நான்கு சக்கர வாகனங்கள் சேதமடைந்தன.

நீலகிரி : கோத்தகிரி அருகே சரக்கு லாரி ஒன்று பாரம் தாங்காமல் பின்னோக்கி வந்து மோதியதில், நான்கு சக்கர வாகனங்கள் சேதமடைந்தன.

கோத்தகிரியில் பாண்டியன் பார்க் பகுதியில் மரக்கம்பை பகுதியே சேர்ந்த நந்தகுமார் (28) என்பவர் வாகனத்தை நிறுத்தி உள்ளார். அந்த வாகனத்திற்கு முன்பாக சாமு என்பவர் வாகனமும் நிறுத்தப்பட்டிருந்தது. மேலும், அந்த வழியாக குளிர்பான குடோனில் இறக்க அதிக அளவில் எடை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று உள்ளது. அந்த லாரியை ராஜூ என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். லாரி மேட்டில் ஏற முடியாமல் கீழ் பகுதியில் நின்று கொண்டிருந்த இரு வாகனத்தின் மீது மோதி, அந்த வாகனத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. 



இது குறித்து காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து நேரில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, இழப்புத் தொகை தருவதாக லாரி உரிமையாளர் கூறியுள்ளார். ஆனால், இழப்புத் தொகை தராமல் லாரியை எடுக்க நடவடிக்கை எடுத்துள்ளார். இதனையடுத்து, காருக்கு உரிய இழப்பீடு தராமல் இருக்கும் லாரி உரிமையாளர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். 

அதிக பாரத்துடன் வந்த இந்த லாரி அதிர்ஷ்டவசமாக இந்த கார்கள் மீது மோதி நின்றது. இல்லையெனில், குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகத்திற்குள் புகுந்து மிகப்பெரிய விபத்து ஏற்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...