தேயிலை செடிகளை கவாத்து அல்லது வீச்சு 'புரூனிங்' செய்ய தேயிலை வாரியம் உத்தரவு

நீலகிரி : தேயிலை தோட்டத்தில் துரித வளர்ச்சி பருவமான ஏப்ரல் இறுதி வாரத்தில், மொத்த பரப்பளவில் 25 சதவீதம் கவாத்து அல்லது வீச்சு 'புரூனிங்' செய்ய தென்னிந்திய தேயிலை வாரியம் உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி : தேயிலை தோட்டத்தில் துரித வளர்ச்சி பருவமான ஏப்ரல் இறுதி வாரத்தில், மொத்த பரப்பளவில் 25 சதவீதம் கவாத்து அல்லது வீச்சு 'புரூனிங்' செய்ய தென்னிந்திய தேயிலை வாரியம் உத்தரவிட்டுள்ளது.



இத்கு தொடர்பாக தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குனர் பால்ராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:- தேயிலையின் துரித வளர்ச்சி பருவமான, ஏப்ரல் முதல் அக்டோபர் வரை மகசூல் கணிசமாக அதிகரிக்கும். சிறு விவசாயிகள் தங்களது தேயிலையின் மொத்த பரப்பளவில் இருந்து கிடைக்கும் மகசூலை தேயிலை தொழிற்சாலைகளுக்கு வினியோகம் செய்வதால், தொழிற்சாலைகளில் அளவுக்கு அதிகமாக, தயாரிக்கப்படும் தேயிலை தூளின் தரம் பாதிக்கப்படுகிறது. தேயிலை தொழிற்சாலைகள் இரவு, பகலாக தேயிலை தூள் தயாரிப்பில் ஈடுபட்டு சந்தைக்கு விற்பனைக்கு அனுப்புகின்றன. தயாரிக்கப்பட்ட தேயிலை தூள் அளவு கணிசமாக உயர்வதால், அதனுடைய தேவை குறைந்து தேயிலை சந்தையில் விற்பனை சராசரி விலையும் குறைந்து விற்கப்படுகிறது.

இதனால், மகசூல் அதிகரித்தும், உற்பத்தி உயர்ந்தும், சராசரி விலையும், பசுந்தேயிலையின் விலையும் அதிகரிக்காமல் தேயிலை தொழில் பின்னடைவை நோக்கி செல்கிறது. இதனால், ஆண்டுதோறும் ஏப்., மாதத்தில் இருந்து, தேயிலை தோட்டத்தின் மொத்த பரப்பளவில் 25 சதவீத பரப்பளவை புரூனிங் அல்லது வீச்சு புரூனிங் செய்து துரித வளர்ச்சி பருவங்களில் நிர்வகித்தல் வேண்டும்.

துரித வளர்ச்சி பருவ காலங்களை நிர்வகிக்கும் நோக்கில், இந்த முறையை செயல்படுத்துவதால், தடையில்லாமல் சிறுதேயிலை விவசாயிகள் தொழிற்சாலைகளுக்கு பசுந்தேயிலை வினியோகம் செய்வதுடன், தேயிலை தூளின் தரமும் உறுதி செய்யப்படுகிறது. தேயிலை சந்தைக்கு விற்பனைக்கு அனுப்பப்படும் தேயிலை தூளின் கொள்ளளவும் அதிகரிக்காமல், விற்பனை விலையில் ஏற்றம் ஏற்பட வழிவகை செய்யப்படுகிறது.

இதனால், பசுந்தேயிலைக்கும் நிலையான விலை கிடைக்கும், இவ்வாறு பால்ராஜ் கூறியுள்ளார். 

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...