Breaking: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு: விசாரணையை தொடங்கியது சி.பி.ஐ.

கோவை : பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு தொடர்பான விசாரணையை சி.பி.ஐ. தொடங்கியது.


கோவை : பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு தொடர்பான விசாரணையை சி.பி.ஐ. தொடங்கியது.



பொள்ளாச்சியில் பெண்களை ஆபாச விடியோ எடுத்து அவர்களிடம் அத்துமீறி பாலியல் கொடுமையில் ஈடுபட்டதாக பொள்ளாச்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், புகார் கொடுத்த மாணவியின் சகோதரரைத் தாக்கியதாக "பார்' நாகராஜ், பாபு, செந்தில், வசந்த் ஆகியோர் மீது போலீஸார் அடிதடி வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதில், பார் நாகராஜை தவிர மற்றவர்கள் சிறையில் உள்ளனர். இதனிடையே, கைதானவர்கள் வீடுகளில் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் நடத்திய சோதனையில், செல்லிடப்பேசிகள், மடிக் கணினிகள், பென் டிரைவ்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து, அடிதடி வழக்கில் சரணடைந்த மணிவண்ணன் என்பவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், குற்றவாளிகள் மீது பாலியல் பலாத்கார வழக்கும் கூடுதலாக சேர்க்கப்பட்டது.



இந்த நிலையில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 10 பிரிவுகளின் கீழ் 2 வழக்குகள் பதிவு செய்து சி.பி.ஐ. இன்று முதல் விசாரணையை தொடங்கியது. 

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...