நீலகிரி : தமிழகம் - கேரளா எல்லையான பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 20 நாட்களாக தொடரும் மின் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நீலகிரி : தமிழகம் - கேரளா எல்லையான பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 20 நாட்களாக தொடரும் மின் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பந்தலூர் மின்வாரிய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் படைச்சேரி, சேரங்கோடு, சேஜ்ரம்பாடி டான்டீ மற்றும் சின்கோனா பகுதிகள் உள்ளன. இப்பகுதிகளில், 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்தப் பகுதிகள் அனைத்தும் யானைகள் நடமாட்டம் உள்ள பகுதியாக உள்ளன. இதனால், ஆட்டோ, ஜீப் போன்ற வாகனங்கள் இரவு 7 மணிக்கு மேல் ஊருக்குள் செல்வதில்லை. இந்த நிலையில், கடந்த 20 நாட்களாக இப்பகுதிகளில் குறைந்த மின் அழுத்தம் உள்ளது. இதனால், தெருவிளக்குகள் எரியாததுடன், வீடுகளிலும் மின்விளக்குகள் எரியாத நிலையும் நிலவுகிறது. மேலும், குடிநீர் கிணறுகளில் மோட்டார் இயக்க முடியாமல், குடிநீர் சப்ளையிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து கிராம மக்கள் பந்தலூர் மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். “போதிய பணியாளர்கள் இல்லை. உடனே பழுதுகளை நீக்க இயலாது,” என சில மின்வாரியத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பந்தலூர் மின்வாரிய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் படைச்சேரி, சேரங்கோடு, சேஜ்ரம்பாடி டான்டீ மற்றும் சின்கோனா பகுதிகள் உள்ளன. இப்பகுதிகளில், 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்தப் பகுதிகள் அனைத்தும் யானைகள் நடமாட்டம் உள்ள பகுதியாக உள்ளன. இதனால், ஆட்டோ, ஜீப் போன்ற வாகனங்கள் இரவு 7 மணிக்கு மேல் ஊருக்குள் செல்வதில்லை. இந்த நிலையில், கடந்த 20 நாட்களாக இப்பகுதிகளில் குறைந்த மின் அழுத்தம் உள்ளது. இதனால், தெருவிளக்குகள் எரியாததுடன், வீடுகளிலும் மின்விளக்குகள் எரியாத நிலையும் நிலவுகிறது. மேலும், குடிநீர் கிணறுகளில் மோட்டார் இயக்க முடியாமல், குடிநீர் சப்ளையிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து கிராம மக்கள் பந்தலூர் மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். “போதிய பணியாளர்கள் இல்லை. உடனே பழுதுகளை நீக்க இயலாது,” என சில மின்வாரியத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.